- பிரதான் மந்திரி ஸ்வாஸ்த்ய சுரக்ஷ யோஜனா (Pradhan Mantri Swasthya Suraksha Yojana) அல்லது பிரதம மந்திரியின் ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டம் ) என்பது இந்தியாவில் உள்ள மக்களுக்கு உச்சபட்ச மருத்துவ சேவை (tertiary level healthcare) கிடைப்பதில் உள்ள சமச்சீரின்மையைச் சரிக்கட்டும் நோக்கில் இந்திய நடுவண் அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டமாகும்.
- இத்திட்டம் மார்ச் 2006 ஆம் ஆண்டு ஒப்புதல் பெற்றது.
இத்திட்டத்தின் படி,
- அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிலையம் போன்ற நிறுவனங்கள் பின்வரும் ஆறு மாநிலங்களிலும் துவங்கப்படும்.
- பீகார் (பாட்னா)
- மத்தியப் பிரதேசம் (போபால்)
- ஒரிசா (புவனேஸ்வர்)
- இராஜஸ்தான் (ஜோத்பூர்)
- சட்டீஸ்கர் (இராஜ்பூர்)
- உத்தராஞ்சல் (ரிசிகேசம்)
- முன்னமே துவங்கப்பட்டுள்ள பின்வரும் 13 மருத்துவக் கல்லூரிகள் 120 கோடி செலவில் மேம்படுத்தப்படும் (100 கோடி மத்திய அரசு தரும். மாநில அரசுகள் 20 கோடி செலவு செய்ய வேண்டும்)
- அரசு மருத்துவமனை, ஜம்மு
- அரசு மருத்துவமனை, சிறீநகர்
- கொல்கத்தா மருத்துவக்கல்லூரி, கொல்கத்தா
- சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் பட்ட மேற்படிப்பு நிறுவனம், லக்னோ
- மருத்துவ அறிவியல் நிறுவனம், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசி
- நிசாம் மருத்துவ அறிவியல்நிறவனம், ஐதராபாத்
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனம், திருப்பதி (பாதிச் செலவை திருப்பதி தேவஸ்தானமே ஏற்றுக் கொள்ளும்)
- அரசு மருத்துவக் கல்லூரி, சேலம்
- இராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனம், ராஞ்சி
- பெங்களு;ரு மருத்தவக் கல்லூரி, பெங்களுரு
- பி.ஜே. மருத்துவக்கல்லூரி, அகமதாபாத்
- கிராண்ட் மருத்துவக் கல்லூரி மற்றும் சர் ஜே.ஜே. மருத்துவமனைகள் குழுமம், மும்பை
- மருத்துவக் கல்லூரி, திருவனந்தபுரம்
- 2009 முதல் 2010 ஆம் ஆண்டு வாக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.