- தனிநபர், வணிக நிறுவனம், மருத்துவமனைகள், என்.ஜி.ஓ-கள், அறக்கட்டளை அமைப்புகள், சுய உதவிக்குழுக்கள், பார்மசிஸ்ட்டுகள், டாக்டர்கள் மற்றும் பதிவு பெற்ற மருத்துவப்பணியாளர்கள் RMPக்கள் போன்றவர்கள் ஏழைகள் பயன்பெறும் வகையில் மருந்தககள் சொந்தமாக (ஜன அவுஷதி கேந்திரம் திறங்கள்) அமைக்க ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும்.
- இத்திட்டம் சுயவேலை வாய்ப்பு வழங்குவதோடு, வருமானம் வரும் வாய்ப்பபையும் தருகிறது. இதற்கு 10 சதுர மீட்டர் இடம் இருந்தாலே போதும்.
பயன்கள்
- Rs. 2.5 லட்சம் வரை நிதி உதவி நீக்குப்போக்கான கடன் வசதிகள் கிடைக்கின்றன.
- மார்க்கெட் உதவியும் கிடைக்கின்றன.
- பொது மருந்துகளையும் சேர்த்து விற்பதற்கு வசதி தரப்பட்டுள்ளன
- எஸ்ஸி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறன் விண்ணப்பதாரர்கள் சொந்தமாக ஜன அவுஷாதி கடையை அமைப்பதற்கு துவக்க உதவியாக ரூ. 50,000 வழங்கப்படும்.
- நாடு முழுவதும் ஏற்கனவே 600-க்கும் அதிகமான ஜன அவுஷதி மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.