Type Here to Get Search Results !

பிரதமரின் தேசிய நிவாரண நிதி

நோக்கம்
  • பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக, 1948ம் ஆண்டு முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவினால், பிரதமர் தேசிய நிவாரண நிதி (பி.எம்.என்.ஆர்.எப்.) உருவாக்கப்பட்டு, இந்நிதிக்காக அழைப்பு விடுக்கப்பட்டது.
  • தற்போது இந்த பி.எம்.என்.ஆர்.எப். நிதி ஆதாரமானது, இயற்கைச் சீற்றங்களான வெள்ளம், புயல், பூகம்பம் போன்றவற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடி உதவி அளிக்க பயன்படுத்தப்படுகிறது.



பயன்கள்
  • பெரிய விபத்துகள், கலவரங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணம் வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.
  • பி.எம்.என்.ஆர்.எப். உதவி மூலம், இதய அறுவை சிகிச்சை,
  • சிறுநீரக மாற்று சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சைக்கான செலவு பகுதியளவு வழங்கப்படுகிறது.
  • நிதியானது முற்றிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் மட்டுமே செயல்படுகிறது.
  • இதற்கென பட்ஜெட்டில் எந்தத் தொகையும் ஒதுக்கப்படுவதில்லை. இந்த நிதித் தொகுப்பு, வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக முதலீடு செய்து வைக்கப்படுகிறது.
  • நிதி வழங்கல், பிரதமரின் ஒப்புதலின்பேரில் மேற்கொள்ளப்படுகிறது. பி.எம்.என்.ஆர்.எப். நாடாளுமன்றத்தால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல. இது வருமான வரிச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அறக்கட்டளை நிதியமாக பிரதமர் அல்லது பல்வேறு பிரதிநிதிகளால் தேசிய நலனுக்காக நிர்வகிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel