- பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக, 1948ம் ஆண்டு முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவினால், பிரதமர் தேசிய நிவாரண நிதி (பி.எம்.என்.ஆர்.எப்.) உருவாக்கப்பட்டு, இந்நிதிக்காக அழைப்பு விடுக்கப்பட்டது.
- தற்போது இந்த பி.எம்.என்.ஆர்.எப். நிதி ஆதாரமானது, இயற்கைச் சீற்றங்களான வெள்ளம், புயல், பூகம்பம் போன்றவற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடி உதவி அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
பயன்கள்
- பெரிய விபத்துகள், கலவரங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணம் வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.
- பி.எம்.என்.ஆர்.எப். உதவி மூலம், இதய அறுவை சிகிச்சை,
- சிறுநீரக மாற்று சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சைக்கான செலவு பகுதியளவு வழங்கப்படுகிறது.
- நிதியானது முற்றிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் மட்டுமே செயல்படுகிறது.
- இதற்கென பட்ஜெட்டில் எந்தத் தொகையும் ஒதுக்கப்படுவதில்லை. இந்த நிதித் தொகுப்பு, வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக முதலீடு செய்து வைக்கப்படுகிறது.
- நிதி வழங்கல், பிரதமரின் ஒப்புதலின்பேரில் மேற்கொள்ளப்படுகிறது. பி.எம்.என்.ஆர்.எப். நாடாளுமன்றத்தால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல. இது வருமான வரிச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அறக்கட்டளை நிதியமாக பிரதமர் அல்லது பல்வேறு பிரதிநிதிகளால் தேசிய நலனுக்காக நிர்வகிக்கப்படுகிறது.