- கிராமப் பகுதிகளில் வறுமை கோட்டிற்குக்கீழ் வாழும் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
நிதி ஆதாரம்
- இத்திட்டத்திற்கு தேவையான முழு நிதியையும் மாநில அரசே வழங்குகிறது.
- ஓவ்வொரு ஆண்டும் 60,000 வீடுகள் கட்டுவதற்கு ரூ.1260 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- அலகுத் தொகை - ரூ.2,10,000/-
- ஒரு வீட்டிற்கான கட்டுமானத் தொகை ரூ. 1,80,000/-
- சூரிய சக்தி விளக்கிற்கான தொகை ரூ. 30,000/-
தகுதி வாய்ந்த பயனாளிகள்
- கிராமப் பகுதிகளில் வீடு இல்லாத, வீட்டு மனை பட்டா உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகள் ஆவர்.