- பிறக்கும் குழந்தைகளின் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பெரும் பணம் செலவிடுவதற்கு சிரமப்படும் பெற்றோரின் துயரத்தைக் குறைப்பதாற்காக மத்திய சுகாதார-குடும்பநல அமைச்சகம் இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
- கருவுற்ற பெண்களுக்கும், பிறந்து 30 நாள் வரையுள்ள சிசுக்களுக்கும் அவை சுகப்பிரசவத்தில் அல்லது அறுவை சிகிச்சை மூலம் (சிசேரியன்) பிறந்திருந்தாலும் எவ்வித கட்டணமும் இல்லாத இலவச மருத்துவ சிகிச்சை இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
- கிராமப்பகுதிகளிலும் நகர்ப்பகுதிகளிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் இந்தத்திட்டம் 2011 ஆம் ஆண்டு ஜுன் முதல் தேதியன்று தொடங்கப்பட்டது.
கருவுற்றப் பெண்களுக்கான உதவிகள்
- இலவசமாகப் பிரசவம் பார்க்கப்படும்
- அறுவைசிகிச்சை (சிசேரியன்) தேவையென்றால் அதுவும் இலவசம்.
- மருந்துகள் மற்றும் தேவையான மருத்துவ சாமான்கள் இலவசம்.
- மருத்துவமனையில் தங்கியிருக்கின்ற நாட்களுக்கு இலவச உணவு.
- இரத்தம் தேவையென்றால் கட்டணமின்றி இரத்தம் செலுத்தப்படும்.
- மருத்துவமனையில் சில வசதிகளைப் பயன்படுத்தக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால் அவை ரத்து செய்யப்படும்.
- வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வருவதற்கு இலவச வாகனவசதி.
- மருத்துவமனையில் இருந்து வெளியிடங்களுக்குப் பரிசோதனைகளுக்குச் செல்ல வேண்டியிருந்தால் அதற்கும் இலவசமான போக்குவரத்து வசதி.
- மருத்துவமனையில் 48 மணிநேரம் தங்கியிருந்த பின்னர் மீண்டும் வீடு திரும்பவும் இலவச வாகன வசதி..
- இலவச சிகிச்சை
- இலவச மருந்தகள் மற்றும் மருந்தப் பொருள்கள்.
- இலவச பரிசோதனைகள்.
- இலவச ரத்தம்.
- பயன்பாட்டுக் கட்டணங்களில் இருந்து விலக்கு.
- வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு இலவச வாகனவசதி.
- வெளியிடப் பரிசோதனைக்குச் சென்றுவரவும் இலவச வாகனவசதி.
- வீடு திரும்புவதற்கும் இலவச வாகனவசதி.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளைப் பிரசவிக்கும் தாய்மார்களுக்கும், அந்த குழந்தைகளுக்கும் மட்டும் மேற்சொன்ன அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும்.
- இத்திட்டத்தினால், சுமார் ஒருகோடியே இருபது லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைப் பார்க்கின்ற மற்ற பெண்களும் இனி பிரசவத்தை அரசு மருத்துவமனைகளிலேயே வைத்துக் கொள்ள முன்வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.