- இரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி வழங்கும் திட்டம் இந்திரதனுஷ் திட்டம் ஆகும்.
இந்திரதனுஷ்
- மத்திய அரசின் இந்திரதனுஷ் திட்டத்தின் கீழ் இரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு காசநோய், மஞ்சள்காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, நிமோனியா காய்ச்சல், தட்டம்மை, மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி, தடுப்பு மருந்துகள் வழங்கப்படும்.
- தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கோவை ஆகிய எட்டு மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
- இந்த மாவட்டங்களில் தடுப்பு மருந்துகள் வழங்காமல் விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு விடுபட்ட தடுப்பு மருந்துகள் வழங்கப்படும். ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய நான்கு மாதங்களில் தொடர்ந்து ஒரு வாரம் இந்தத் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும். முதற்கட்டமாக ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை மருந்துகள் வழங்கப்படும்.
இயங்கும் நாள் நேரங்கள்
- மாவட்டங்களில் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் 3,260 தடுப்பு மருந்து மையங்கள் நிறுவப்பட்டு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும்.
- தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி முகாம் நாள்களில் தொடர்ந்து மருந்து கொடுக்கப்படும். இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாள்களில் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே தடுப்பூசி, தடுப்பு மருந்து வழங்கப்படும்.
- 116 நடமாடும் குழுக்களின் மூலமாக தொலைதூரம், எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி மருந்து வழங்கப்பட உள்ளது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர்