- அமைப்பு சாராத (Unorganised) துறையில் வேலை செய்பவர்கள், ஓய்வுக்காலத்துக்குப்பின், அதாவது 60வயதுக்குப் பின் மாதம் ரூ.1,000-5,000 வரை ஓய்வூதியம் பெறவேண்டும் என்பதுதான். அதற்காக அரசு தன் சார்பாக ஒரு சிறு தொகையைச் செலுத்தும்.
யார் இணையலாம்?
- 18 வயது முதல் 40 வயதுடைய, இந்தியாவில் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர் யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணையலாம். ஒரே குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்டு 40 வயதுக்குள் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.
யார் நிர்வகிக்கிறார்கள்?
- இத்திட்டத்தை வருங்கால வைப்புநிதி ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்கிற அரசு அமைப்பு நிர்வகிக்கிறது. இத்திட்டத்தின்மூலம் திரட்டப்படும் நிதியில் 85%அரசுப்பத்திரங்கள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யப்படும். மீதமுள்ள 15% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.