தாய் திட்டம் Assured Maximum Service to Marginal People in All Villages’, or AMMA
TNPSCSHOUTERSDecember 19, 2018
0
தமிழக முதல்வரால் 24.2.2013 அன்று "அம்மா திட்டம்' (அனைத்து கிராமத்திலும் அடிதட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கல் திட்டம்) துவங்கப்பட்டது. அதிகாரிகளே மக்கள் இருக்கும் இடம் சென்று மனுக்கள் பெரும் திட்டம்.
ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் வருவாய் துறையினரால் நடத்தப்படும். இதன்மூலம் வழங்கப்படும் சேவைகள்
பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்).
குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள்.
பிறப்புமற்றும் இறப்பு சான்றிதழ்கள்.
சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள்.
வாரிசுரிமைச் சான்றிதழ்கள்
முதல் பட்டதாரி / குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற் கான சான்றிதழ்கள்.
ஆண்வாரிசு இல்லை என்ற சான்றிதழ்கள்.
குடும்பத்தில் இரு பெண் குழந்தைகள் மட்டும் உள்ளதற்கான சான்றிதழ்கள்.
முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை கோரும் மனுக்கள்.
துயர் துடைப்பு / விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை.