- மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டமானது இந்தியக் கல்வி முறையில் திட்டமிடல் மற்றும் பல்வேறு தேசிய திட்டங்கள், மாவட்ட அளவிலான நிகழ்வுகள், வெளியிலிருந்து பெறப்பட்ட நிதியுதவி திட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்தலின்போது பெற்ற அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் கருத்தாழமிக்க செயல்பாட்டு நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இது 1994 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட உலகின் கல்வித் திட்டங்களில் மிகப்பெரிய ஒன்றாகும். இத்திட்டத்தின் நோக்கம் அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்ற இலக்கை அடைவதாகும்.
- DPEP (நிலை 1) திட்டமானது ஒரு மைய அரசு திட்டம் ஆகும். இத்திட்டம் முதலில் உலக வங்கி உதவியுடன் 5 மாநிலங்களில் தொடங்கப்பட்டு பின்னர் பிற மாநிலங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாநிலமும் 5 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டத்தின் நோக்கங்கள்
- முறை மற்றும் முறைசாரா கல்வி மூலம் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கல்வியைப் பெறுதல். 100% சேர்க்கை மற்றும் தக்கவைத்தல்.
- தரமான கல்வியின் மூலம் குழந்தைகள் குறைந்தபட்ச கற்றல் இலக்கை அடைதல். பள்ளிகளில் தேக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் இடைநிற்றலை குறைத்தல்.
- ஆசிரியர்களுக்கும், சமூகத்தினருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், அதிகபட்ச பரவலாக்குதல், சமுதாய பங்கேற்பு, சமூகத்தின் ஒவ்வொரு அலகிலிருந்தும் பள்ளி வயது மாணவர்களை பள்ளியில் சேர்த்து சேர்க்கையை அதிகரித்தல்.