TNPSC SHOUTERS - MAY 2018
CURRENT AFFAIRS
|
||
S.NO
|
DAY & MONTH
|
DOWNLOAD LINK
|
1.
|
1st
MAY 2018
|
|
2.
|
2nd
MAY 2018
|
DOWNLOAD
HERE
|
3.
|
3rd
MAY 2018
|
DOWNLOAD
HERE
|
4.
|
4th
MAY 2018
|
DOWNLOAD
HERE
|
5.
|
5th
MAY 2018
|
DOWNLOAD
HERE
|
6.
|
6th
MAY 2018
|
|
7.
|
7th
MAY 2018
|
|
8.
|
8th
MAY 2018
|
|
9.
|
9th
MAY 2018
|
|
10.
|
10th
MAY 2018
|
|
11.
|
11th
MAY 2018
|
|
12.
|
12th
MAY 2018
|
|
13.
|
13th
MAY 2018
|
|
14.
|
14th
MAY 2018
|
|
15.
|
15th
MAY 2018
|
|
16.
|
16th
MAY 2018
|
|
17.
|
17th
MAY 2018
|
|
18.
|
18th
MAY 2018
|
|
19.
|
19th
MAY 2018
|
|
20.
|
20th
MAY 2018
|
|
21.
|
21st
MAY 2018
|
|
22.
|
22nd
MAY 2018
|
|
23.
|
23rd
MAY 2018
|
|
24.
|
24th
MAY 2018
|
|
25.
|
25th
MAY 2018
|
|
26.
|
26th
MAY 2018
|
|
27.
|
27th
MAY 2018
|
|
28.
|
28th
MAY 2018
|
|
29.
|
29th
MAY 2018
|
|
30.
|
30th
MAY 2018
|
|
31.
|
31st
MAY 2018
|
ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்: மத்திய நிதியமைச்சகம் தகவல்
- நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் நடைபெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
- 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும் மொத்தம் ரூ..1,03,458 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதில் (சி) ஜிஎஸ்டி ரூ.18,652 கோடி, (எஸ்) ஜிஎஸ்டி ரூ.25,704 கோடி, ஒருங்கிணைந்த (ஐ) ஜிஎஸ்டி ரூ.50,548 கோடி (இதில், இறக்குமதி மூலம் கிடைத்த ஜிஎஸ்டி ரூ.21,246 கோடி) கூடுதல் வரி (செஸ்) ரூ.8,554 கோடி (இதில், இறக்குமதி மூலம் கிடைத்த ஜிஎஸ்டி ரூ.702 கோடி) வசூலாகியுள்ளது.
- இதில் மத்திய மற்றம் மாநில அரசுகளுக்கு (சி) ஜிஎஸ்டி ரூ.32,493 கோடி மற்றும் (எஸ்) ஜிஎஸ்டி ரூ.40,257 கோடி வருவாய் ஏற்பட்டுள்ளது. இது பொருளாதார முன்னேற்றத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. இருப்பினும் நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால் பலர் தங்களின் வரி பாக்கிகளை செலுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இந்த மாத ஜிஎஸ்டி வசூலை எதிர்கால போக்காக கருத இயலாது என்று தெரிவித்திருந்தது.
- முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இதன்படி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நிதியாண்டில் ரூ.7.41 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஜூலை முதல் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை சராசரியாக மாதம் ரூ.89,000 கோடி ஜிஎஸ்டி வசூலானது. ஆனால் நிதியாண்டின் கடைசி மாதம் மட்டும் கூடுதலாக ரூ.24,000 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.
தேசிய கார் பந்தயம்; நடப்புச் சாம்பியனான கெளரவ் கில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தல்
- தேசிய கார் பந்தயத்தில் நடப்புச் சாம்பியனான கெளரவ் கில் மீண்டும் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.
- மெட்ராஸ் மோட்டார் விளையாட்டு சங்கம், இந்திய மோட்டார் விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 40-வது தேசிய கார் பந்தயம் கடந்த 2 நாள்களாக நடைபெற்றது.
- சென்னை அடுத்த திருபெரும்புதூரில் எம்எம்ஆர்டி கார் பந்தய மைதானத்தில் நடைப்பெற்ற இந்த கார் பந்தயத்தில் நாடு முழுவதும் இருந்து முன்னணி வீரர்களைக் கொண்ட 31 குழக்கள் பங்கேற்றன.
- அதன்படி, மஹிந்திரா அணி சார்பில் பங்கேற்ற நடப்புச் சாம்பியன கெளரவ் கில் பந்தய தூரத்தை 44 நிமிடம் 35 நொடிகளில் கடந்தார்.
- அணிகள் பிரிவில் கில் - மூசா இணை பந்தய தூரத்தை 1 மணி நேரம், 28:43. 1 நிமிடங்களில் கடந்தது.அமித்ரஜித் கோஷ் - அஸ்வின் நாயக் இணை இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
- ஐஎன்ஆர்சி 2-இல் கர்ணகடூர், நிகில் வி பாய் இணை முதலிடத்தைப் பெற்றது. ஐஎன்ஆர்சி 3-இல் விக்ரம் ராவ் - சோமையா இணை முதலிடத்தைப் பெற்றது.
- 40-வது தேசிய கார் பந்தயத்தில் நடப்புச் சாம்பியன் கெளரவ் கில் மீண்டும் முதலிடம் பெற்ற நிகழ்வு இந்த போட்டியில் பெரும் உற்சாகத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.
சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை மத்திய தொலை தொடர்புத் துறை
- இனி சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
- இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வரை ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மக்களை தொல்லை செய்து இருந்தது. ஆனால் அப்படி இணைக்க தேவையில்லை என்று மத்திய தொலைத்தொடர்பு துறை ஆணை பிறப்பித்தது.
- இந்த நிலையில் தற்போது இனி சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. வேறு அடையாள அட்டை வைத்தும் இனி சிம் வாங்கலாம் என்றும் மத்திய தொலை தொடர்புத் துறை கூறியுள்ளது.
இந்திய அணி 'நம்பர்-1'
- டெஸ்ட் போட்டி, ஆண்டு தரவரிசையில் இந்திய அணி 4 புள்ளிகள் கூடுதலாக பிடித்து, 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது.டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ஆண்டு, திருத்தி அமைக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை ('ரேங்க்') சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டது.
- இதன்படி, 2014-15 'சீசனில்' ஆஸ்திரேலியாவிடம் இரண்டு தோல்வி, இங்கிலாந்திடம் 3-1 என டெஸ்ட் தொடரை இழந்தது மற்றும் 2016-17ல் 13 டெஸ்டில் 10 வெற்றி என, இந்திய அணியின் செயல்பாடு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
- இதில், கூடுதலாக 4 புள்ளிகள் பெற்ற இந்திய அணி, 125 புள்ளிகளுடன், 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது. அதேநேரம், தென் ஆப்ரிக்க அணிக்கு 5 புள்ளிகள் குறைக்கப்பட்டன. இருப்பினும், 112 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா, 2வது இடத்தை தக்கவைத்தது.இதையடுத்து இந்திய அணிக்கு ரூ. 6.64 கோடி பரிசுத்தொகை கிடைக்கும். தென் ஆப்ரிக்காவுக்கு ரூ. 3.31 கோடி தரப்படும்.ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகள் கூடுதலாக பெற்று, நியூசிலாந்தை பின்தள்ளி, மூன்றாவது இடம் பிடித்தது. இங்கிலாந்து 5வது இடத்தில் உள்ளது.
2018- பட்ஜெட் கூட்டத் தொடரில் சிறந்த லோக்சபா எம்.பி. சுப்ரியா சுலே
- 16-வது பார்லி. லோக்சபா எம்.பி.க்களில் மஹாராஷ்ரா மாநில எம்.பி.க்கள் சிறந்த எம்.பிக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.ப்ரைம் பாயின்ட் பவுண்டேசன் என்ற அமைப்பு பார்லி. லோக்சபா எம்பி.க்களின் செயல்பாடுகள், விவாதம் நடத்துதல், கேள்வி கேட்டல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த எம்.பி.க்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.
- 16-வது பார்லி. லோக்சபாவின் 2018 பட்ஜெட் கூட்டத்தொடர் வரையில் எம்.பி.க்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததில் முதல் மூன்று எம்.பி.க்கள் சிறந்த எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- அவர்களில் தேசியவாத காங். எம்.பி. சுப்ரியா சுலே ( 74 முறை விவாதம் , 16 தனிநபர் மசோதா கொண்டு வந்தது, 983 கேள்விகள்) என 1,073 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும் சிவசேவனா கட்சியின் சிராங்க் அப்பா பார்னே 102 முறை விவாதம், 16 தனிபர் மசோதா, 932 கேள்விகள் ) என 1,050 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், காங். எம்.பி.யான ராஜிவ் ஷங்கரராவ் (97 விவாதம், 15 தனிநபர் மசோதா, 919 கேள்விகள்) என 1,031 புள்ளி பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளனர்.
டெல்லியில் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு மோடி துவங்கி வைக்கிறார்
- டெல்லியில் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடக்கிறது இதற்காக எல்லா மாநில முதல்வர்களும் டெல்லி சென்று இருக்கிறார்கள்.
- பிரதமர் மோடி தலைமை தாங்கி இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார். 2019-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அந்த கொண்டாட்ட விழாவிற்கு முன் இந்தியா முழுக்க நிறைய நலத்திட்டங்களை உடனடியாக நடந்த மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது.
- இந்த நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்க முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. இன்று நாள் முழுக்க இந்த மாநாடு நடக்கும். மாநில வளம், மின்சாரம், வறுமை, கல்வி, தூய்மை இந்தியா திட்டம் , விவசாய பிரச்சனை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
வக்பு வாரிய தலைவரானார் அன்வர்ராஜா
- தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக, அ.தி.மு.க., - எம்.பி., அன்வர்ராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பின், அன்வர்ராஜா, முதல்வர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
- விமான பயணத்தின் போது மொபைல் போனில் இணைய சேவையை பயன்படுத்தவும், பேசவும் பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு ஏற்கனவே டிராய் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசு அமைத்த உயர்மட்ட குழுவும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
- விமானம் கிளம்பி, 3, 000 மீட்டர் உயரத்தில் பயணம் செய்யும் போது ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி கொள்ளலாம். தொலைதொடர்பு நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் மற்ற சில நிறுவனங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய அவகாசம் தேவைப்படுவதால், இந்த திட்டம் அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்கு பிறகு தான் அமல்படுத்தப்படும்.