
11th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
டெல்லியில் இந்தியா ரஷ்யா இடையே முக்கிய பேச்சுவார்த்தை
- இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் டெல்லியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
- இதில் புதினுக்குத் திருக்குறள் புத்தகத்தைப் பரிசாக வழங்கியிருக்கிறார் மோடி. பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு புதின் இந்தியா வந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
- இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், அணுசக்தி, உரங்கள், தொழில்துறை உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
- இந்த சந்திப்பில் 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக உயர்த்துவதற்கான இலக்கை அடைவதற்கான வழிமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
- இந்த நிலையில், எண்ணெய் வர்த்தகத்தை மட்டும் சார்ந்திராமல் பல்வேறு துறைகளிலும் பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்க இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
- 2030-க்குள் 100 பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டுவதற்காக புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் ரஷ்ய நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிப்பது மட்டுமின்றி, ரஷ்யாவில் இந்திய நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும் இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது.
- இதுதவிர அணுசக்தி, இயற்கை எரிவாயு மற்றும் பிற எரிசக்தித் துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது.

