
ஆளில்லா டிரோன் திவ்யாஸ்திரா Mk3 (Divyastra Mk3) சோதனை வெற்றி
- இந்தியாவில் உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை, ஜெட் என்ஜின் மூலம் இயங்கும் 'திவ்யாஸ்திரா Mk3' (Divyastra Mk3) loitering munition-ஐ Kawa UAV Pvt.Ltd. நிறுவனம் வெற்றிகரமாக வானில் பறக்கவிட்டதாக தெரிவித்துள்ளது.
- இலக்கைத் தேடி, குறிப்பிட்ட பகுதியில் சுற்றித் திரிந்து, துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட loitering munition வகையைச் சேர்ந்த இந்த அமைப்பு, இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
- குறிப்பாக, ஜெட் பவர் மூலம் இயங்கும் துல்லியத் தாக்குதல் அமைப்பை உள்நாட்டிலேயே உருவாக்கியிருப்பது பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
- உள்நாட்டிலேயே மேம்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் துல்லியத் தாக்குதல் தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், திவ்யாஸ்திரா Mk3-ன் இந்த சோதனை இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் உள்நாட்டு தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

