
12th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.828 கோடி விடுவித்து அரசாணை
- கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு தொகுதிக்கும் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வீதம் மொத்தம் ரூ.702 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.
- இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களால் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி செலவையும் மாநில அரசே ஏற்றுக்கொண்டு, அதற்கான நிதியையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் அரசிடம் பரிந்துரைத்தார்.
- சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.3.54 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
- இதற்காக மாநிலத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து 2026-27-ம் ஆண்டுக்கு மொத்தம் ரூ.828.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனை விடுவிக்க அதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் புதிய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- முந்தைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு நிதியை செலவிடக் கூடாது. ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையை பெற்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் விடுவிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருக்கு அதிகாரம் அளித்து ஆணையிடப்படுகிறது.
- தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.12) தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை கொண்டு வந்து உரையாற்றினார். இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் காரசார விவாதம் நடத்தினார்கள்.
- அதிமுக, பாஜக,பாமக ஆகிய கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வரின் தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது.
- மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதா விரிவான பரிசீலனைக்காக 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- மக்களவையிலிருந்து 21 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையிலிருந்து 10 உறுப்பினர்கள் என மொத்தம் 31 உறுப்பினர்கள் இக்குழுவில் இடம் பெறுவர்.
- இக்கூட்டுக்குழு இம்மசோதா குறித்து விரிவாக ஆய்வு செய்து, 2026-ஆம் ஆண்டின் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

