//
Type Here to Get Search Results !

31st JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

31st JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2026 - 8வது நாள்
  • 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 8-வது நாளான ஜூலை 30 அன்று, இந்தியா மேலும் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
  • இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 17 ஆக (3 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம்) உயர்ந்துள்ளது.
  • ஆண்களுக்கான +110 கிலோ பளுதூக்குதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இவர் ஸ்நாட்ச் பிரிவில் 176 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையை நிகழ்த்தினார்.
  • இதையடுத்து நடைபெற்ற மகளிருக்கான வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அனுபவ வீராங்கனை சீமா வெண்கலப் பதக்கம் வென்றார். தனது மூன்றாவது முயற்சியில் 58.65 மீட்டர் தூரம் வீசி அவர் இந்த பதக்கத்தைக் கைப்பற்றினார்.
மக்களவையில் பிறப்பு, இறப்பு திருத்த மசோதா 2026 நிறைவேற்றம்
  • மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராயால் அறிமுகப்படுத்தப்பட்ட 'பிறப்பு மற்றும் இறப்பு (திருத்த) மசோதா 2026', எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
  • தற்போது நடைமுறையில் உள்ள 1969-ஆம் ஆண்டின் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திருத்தம், பிறப்பு மற்றும் இறப்புகளை உரிய நேரத்தில் பதிவு செய்வதை ஊக்குவிக்கவும், தாமதமான பதிவுகளுக்கான நடைமுறைகளைக் கடுமையாக்கவும் வழிவகை செய்கிறது.
  • 1 முதல் 2 ஆண்டுகள் தாமதம்: ஒரு பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து 1 ஆண்டுக்கு மேலாகி 2 ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்தால், மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக நடுவரின் (Executive Magistrate) ஒப்புதலுக்குப் பிறகே பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.
  • 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதம்: நிகழ்வு நடந்து 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதமானால், நீதித்துறை நடுவரின் (Judicial Magistrate) நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
  • இச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்கள் குடிமக்களின் முக்கியமான சட்டப்பூர்வ அடையாளமாகப் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுசீரமைக்கப்பட்ட கேலோ இந்தியா திட்டம், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான மேம்படுத்தப்பட்ட நிதியுதவி ஆகியவற்றிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (31.07.2026) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2026-27 முதல் 2030-31 வரையிலான காலகட்டத்திற்கு, ரூ.36,441 கோடி ஒருங்கிணைந்த நிதி ஒதுக்கீட்டில், விரிவாக்கப்பட்ட கேலோ இந்தியா திட்டத்திற்கும், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான மேம்படுத்தப்பட்ட உதவித் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • இது, இளைஞர் மேம்பாட்டுக்காகவும், விளையாட்டுகளின் மேம்பாட்டுக்காகவும் அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. 
  • சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் மிகவும் லட்சியமிக்க விளையாட்டு மேம்பாட்டுத் திட்டம் இதுவாகும். இந்த நிறுவனங்கள் ஒன்றிணைந்து, நாடு முழுவதும் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி, விளையாட்டு அறிவியல் ஆதரவு, நவீன உள்கட்டமைப்பு ஆகியவற்றை வழங்கும்.
தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் ரூ.84,084 கோடி நிதி ஒதுக்கீடு
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள ‘சமுத்திர மந்தன்’ எனப்படும் தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • மத்திய அரசின் முழுப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்கு 2030-31 நிதியாண்டு வரையிலான காலத்திற்கு ரூ.84,084 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சமுத்திர மந்தன் திட்டம் மூலம் 600 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய்க்குச் சமமான ஆற்றல் இருப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
பிரதமரின் கிசான் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு -  மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி (பிரதமரின் கிசான் திட்டம்) திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2026-27 முதல் 2030-31 வரை) தொடர, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.3.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் வளமே நாட்டின் வளத்திற்கு அடிப்படை என்ற அரசின் உறுதியான அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 
  • இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு நேரடிப் பணப் பரிமாற்ற முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளிப்படைத்தன்மையுடன் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
  • 23-வது தவணையில் மட்டும் ரூ.18,984 கோடிக்கும் அதிகமான தொகை விடுவிக்கப்பட்டு 9.49 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்ததுள்ளனர். 
  • கொவிட் காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.1.71 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி உதவி வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் பெண் விவசாயிகளுக்கு ரூ.1.06 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளதுடன், பயனாளிகளில் நான்கு பேரில் ஒருவர் பெண் விவசாயி என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel