
22nd JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் 1091 என்ற இலவச பிரத்யேக உதவி எண் அறிமுகம்
- பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் 1091 என்ற இலவச பிரத்யேக உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- இந்த எண் 24 மணி நேரமும், வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
- இந்த உதவி எண் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு வகையான குற்றங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து நேரடியாக புகார் அளிக்க முடியும்.
- குறிப்பாக வன்கொடுமை, பாலியல் தொந்தரவு, பின்தொடர்தல் (Stalking), மிரட்டல், இணையவழி துன்புறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடி காவல் உதவியைப் பெற இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம்.
- மேலும், அவசரகால சூழ்நிலைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பயிற்சி பெற்ற காவலர்கள் இந்த சேவையை 24 மணி நேரமும் கண்காணித்து செயல்படுத்த உள்ளனர்.
- புகார் பெறப்பட்ட உடனேயே சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இங்கிலாந்து நாட்டில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சியானது கெய்ர் ஸ்டார்மரை பிரதமர் வேட்பாளராக கொண்டு தேர்தலை சந்தித்தது.
- தேர்தலில் தொழிலாளர் கட்சியானது 411 இடங்களில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.
- தொடர்ச்சியான சர்ச்சைகள், கொள்கை மாற்றங்கள் மற்றும் சரிந்துவரும் மக்கள் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக, ஸ்டார்மரின் பதவி கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியான அழுத்தத்தில் இருந்து வந்தது.
- 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது வழங்கிய தேர்தல் வாக்குறுத்திகளை ஸ்டார்மர் நிறைவேற்ற தவறிவிட்டதாக, தொழிலாளர் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
- இங்கிலாந்து நாட்டின் பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்தவதாக அறிவித்துள்ளார்.
- சீனாவின் குயாங் நகரில் சர்வதேசக் குத்துச்சண்டை கூட்டமைப்பு சார்பில் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இன்று மதியம் நடைபெற்ற மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் ஜோதி உஸ்பெகிஸ்தான் நாட்டின் முன்னணி வீராங்கனையான பர்ஜோனா போஜிலோவாவை எதிர்கொண்டார்.
- நடுவர்களின் ஒருமித்த முடிவின்படி 5-0 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி ஜோதி தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.
- 51 கிலோ எடைப்பிரிவில் மீனாட்சி போராடி வெள்ளிப் பதக்கம் வென்றார். பிராச்சி 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் தீவிரமாகப் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவர் 70 கிலோ எடைப்பிரிவில் தீபக் இறுதிச் சுற்று வரை சென்று வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
- உலகக் கோப்பை குத்துச்சண்டை அரங்கில் 1 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 4 பதக்கங்களை வென்று இந்தியக் குத்துச்சண்டைக் கூட்டணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

