
11th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரூ 11,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, முடிவுற்ற திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்
- கேரளாவின் பரபரப்பு வாய்ந்த கடலோர நகரமான கொச்சிக்கு இன்று சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, அங்கு அதிகளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் பல்வேறுத் திட்டங்களைத் தொடங்கி வைத்ததன் மூலம், அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அதிக முதலீடுகளுக்கான அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் ரூ 11,000 கோடி மதிப்பிலான பல்வேறுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஜல் ஜீவன்' திட்டத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு (2028 வரை) நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- நாடு முழுவதும் கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் 'ஜல் ஜீவன்' திட்டத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு (2028 வரை) நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- கிராமப்புறப் பெண்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் சிரமத்தைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
- இந்தத் திட்டத்திற்காக இதுவரை ஒதுக்கப்பட்ட நிதியை விட கூடுதலாக அதிகரித்து, மொத்த நிதியை ரூ.8.7 லட்சம் கோடியாக உயர்த்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
- தகுதியுள்ள கிராமப்புற குடும்பங்கள் குழாய் இணைப்பு பெற ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியதில்லை. ஒரு வீட்டிற்குத் தேவையான இணைப்புச் செலவான ரூ.30,000 முதல் ரூ.60,000 வரையிலான முழுத் தொகையையும் அரசே ஏற்கிறது.
- 1.25 கோடி வீடுகளுக்குக் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1.11 கோடிக்கும் அதிகமான (89.10%) வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்குத் தலா 55 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாதந்தோறும் வெறும் 30 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
- குழாய் குடிநீர் வசதி இல்லாத கிராமப்புற குடும்பங்கள், குறிப்பாகத் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மாநில அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து தகுதியான வீடுகளை அடையாளம் கண்டு வருகின்றன.
- இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் முதலீடுகள் குறித்த வழிகாட்டுதல்களில் மாற்றங்களை மேற்கொள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- தற்போதுள்ள கொள்கை பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளது:
- பணமோசடி தடுப்பு விதிகள், 2005 இன் கீழ், முதலீட்டு சமூகத்தால் பரவலாகப் பயன்படுத்தப்படும் நன்மை பயக்கும் உரிமையை நிர்ணயிப்பதற்கான வரையறை மற்றும் அளவுகோல்களை இந்தத் திருத்தம் வழங்குகிறது.
- பயனடைந்த உரிமை சோதனை முதலீட்டு நிறுவன அளவில் பயன்படுத்தப்படும்.
- இந்தியாவுடன் நில எல்லைகளைப் பகிரும் நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள், 10 சதவீதம் வரை மட்டுமே கட்டுப்பாடு இல்லாத பயனடைந்த உரிமை கொண்டிருந்தால், பொருந்தக்கூடிய துறைசார் முதலீடுகள், நுழைவு முறைகள் மற்றும் தொடர்புடைய நிபந்தனைகளின் அடிப்படையில் தானியங்கி வழி மூலம் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும்.
- இத்தகைய முதலீடுகள் மேற்கொள்ளப்படும் போது, முதலீடு பெறும் நிறுவனம் தேவையான தகவல்கள் மற்றும் தொடர்புடைய விவரங்களை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறைக்கு கட்டாயமாக அறிவிக்க வேண்டும்.
- மூலதனப் பொருட்கள், மின்னணு மூலதனப் பொருட்கள், மின்னணு கூறுகள், பாலிசிலிக்கான் மற்றும் இங்காட்-வேஃபர் ஆகியவற்றில் குறிப்பிட்ட துறைகள்/உற்பத்தி நடவடிக்கைகளில் முதலீடுகளுக்கான திட்டங்கள் 60 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட்டு முடிவு செய்யப்படும்.
- இது போன்ற தருணங்களில், முதலீட்டாளர் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் மற்றும் கட்டுப்பாடு, இந்தியக் குடிமக்கள் மற்றும்/அல்லது இந்தியக் குடிமக்களால் சொந்தமாகக் கட்டுப்படுத்தப்படும் இந்திய நிறுவனங்களிடம் இருக்கும்.

