//
Type Here to Get Search Results !

18th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

18th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு "செம்மொழி இலக்கிய விருது" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
  • குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகின்ற, தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். 
  • தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் "செம்மொழி இலக்கிய விருது" என்ற தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். விருதுடன், தலா ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் கலியாபூரில் ₹6,950 கோடி மதிப்புள்ள காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தடத் திட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
  • அசாம் மாநிலம் கலியாபூரில் ₹6,950 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தடத் திட்டத்திற்கு (தேசிய நெடுஞ்சாலை-715-ன் கலியாபோர்-நுமலிகார் பிரிவின் 4-வழித்தடம்) பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.01.2026) அடிக்கல் நாட்டினார்.
  • இந்த நிகழ்ச்சியில் அசாம் ஆளுநர் திரு லட்சுமண பிரசாத் ஆச்சார்யா, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர்கள் திரு சர்பானந்த சோனோவால், திரு பபித்ரா மார்கெரிட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.    
5 புதிய அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்
  • 5 புதிய அம்ரித் பாரத் ரயில்கள் இன்றுமுதல் இயக்கப்படுகின்றன. அஸ்ஸாமில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) நடைபெற்ற புதிய அம்ரித் பாரத் ரயில்கள் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ரயில்களை காணொலி வழியாக கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
  • திப்ரூகர் - கோமதிநகர், காமக்யா - ரோஹ்தக், கொல்கத்தா (ஹௌரா) - ஆனந்த் விஹார், கொல்கத்தா (சியால்டா) - பனாரஸ், கொல்கத்தா (சந்திரகாச்சி) - தாம்பரம் ஆகிய வழித்தடங்களில் 4 அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். 
  • முன்னதாக சனிக்கிழமை (ஜன. 17), அலிபூர்துவார் - எஸ்எம்விடி பெங்களூரு, அலிபூர்துவார் - மும்பை (பன்வேல்), நியூ ஜல்பைகுரி - நாகர்கோவில், நியூ ஜல்பைகுரி - திருச்சி ஆகிய வழித்தடங்களில் 4 அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடக்கி வைத்திருந்த நிலையில், நாட்டில் இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel