Type Here to Get Search Results !

7th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


7th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் உள்ள மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். புதிய உயர்மட்ட மேம்பாலத்திற்கு 'வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • இந்த பாலம் மதுரை தொண்டி சாலையில் அண்ணா பேருந்து நிலைய சந்திப்பில் தொடங்கி ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்பு வழியாக மதுரை சுற்றுச் சாலையில் இணைந்து அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் முடிவடைகிறது.
எலக்ட்ரிக் பஸ், ஸ்கூட்டர் உற்பத்திக்கு தமிழக அரசுடன் வின்பாஸ்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்ய கடந்த ஆண்டு நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்திருந்தது.
  • இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது. இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆலையில் வின்பாஸ்ட் விஎப்6 மற்றும் விஎப்7 கார்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
  • இந்நிலையில், இந்த ஆலையை மேலும் விரிவுபடுத்தி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலக்ட்ரிக் பஸ்கள் தயாரிக்க முடிவு செய்திருந்தது. 
  • வியட்நாம் தலைநகர் ஹனாயில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுடன் கையெழுத்தாகியுள்ளது. 
  • விரிவாக்கத்துக்காக ஏற்கெனவே உள்ள ஆலையை ஒட்டி 500 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து, மின் இணைப்பு, தண்ணீர் வசதி, சாலை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கான அனுமதிகளையும் வழங்கும். மேற்கண்ட ஆலை விரிவாக்கத்துக்காக ரூ.4,498 கோடியை வின்பாஸ்ட் முதலீடு செய்கிறது.
தமிழ்நாடு வளா்கிறது என்ற பெயரில் முதலீட்டாளர் மாநாடு
  • விரகனூர் சுற்றுச்சாலை அருகே வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஐடா ஸ்கட்டா் அரங்கில், தமிழ்நாடு வளா்கிறது என்ற தலைப்பில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.
  • மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 'தமிழ்நாடு வளா்கிறது' என்ற தலைப்பில் இன்று (டிச. 7) நடைபெற்றுவரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரூ.36,660.35 கோடிக்கான 91 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel