//
Type Here to Get Search Results !

25th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


25th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை சந்தாலி மொழியில் குடியரசுத்தலைவர் வெளியிட்டார்
  • இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சந்தாலி மொழியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (டிசம்பர் 25, 2025) வெளியிட்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார்.
  • இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • 2003 -ம் ஆண்டின் 92 - வது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சந்தாலி மொழி, இந்தியாவின் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றாகும். 
  • ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையிலான பழங்குடியின மக்களால் இம்மொழி இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி லக்னோவில் ராஷ்டிர பிரேர்ணா ஸ்தலத்தை திறந்து வைத்தார்
  • முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை மற்றும் இலட்சியங்களைப் போற்றும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ராஷ்டிர பிரேர்ணா ஸ்தலத்தை திறந்து வைத்தார். 
  • திரு வாஜ்பாயின் 101வது பிறந்தநாளைக் குறிக்கும் இந்த நிகழ்வில் பேசிய பிரதமர், இன்று லக்னோவின் மண் ஒரு புதிய உத்வேகத்திற்கு சாட்சியாகிறது என்று குறிப்பிட்டார். அவர் தேசத்திற்கும் உலகிற்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 
  • இந்தியாவிலும் லட்சக்கணக்கான கிறிஸ்தவ குடும்பங்கள் இன்று இந்த விழாவைக் கொண்டாடுகின்றன என்று திரு மோடி எடுத்துரைத்தார். 
  • இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டும், அதுவே அனைவரின் கூட்டு விருப்பம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
  • ராஷ்டிர பிரேர்ணா ஸ்தலம், நீடித்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கிய தேசிய நினைவுச் சின்னமாகவும், உத்வேகம் அளிக்கும் வளாகமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • சுமார் ₹230 கோடி செலவில், 65 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த வளாகம், தலைமைத்துவப் பண்புகள், தேசிய சேவை, கலாச்சார உணர்வு மற்றும் பொதுமக்களுக்கு உத்வேகம் அளிப்பதை வளர்ப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிரந்தர தேசிய சொத்தாகக் கருதப்படுகிறது.
  • இந்த வளாகத்தில் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மற்றும் முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் 65 அடி உயர வெண்கலச் சிலைகள் உள்ளன. 
  • இவை இந்தியாவின் அரசியல் சிந்தனை, தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் பொது வாழ்வில் அவர்களின் முக்கிய பங்களிப்புகளை அடையாளப்படுத்துகின்றன. 
  • இது சுமார் 98,000 சதுர அடி பரப்பளவில், தாமரை வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரு அதிநவீன அருங்காட்சியகத்தையும் கொண்டுள்ளது. 
  • இந்த அருங்காட்சியகம், மேம்பட்ட டிஜிட்டல் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியாவின் தேசியப் பயணம் மற்றும் இந்த தொலைநோக்குத் தலைவர்களின் பங்களிப்புகளைக் காட்சிப்படுத்துகிறது, இது பார்வையாளர்களுக்கு ஈர்க்கக்கூடிய மற்றும் கல்விசார் அனுபவத்தை வழங்குகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel