//
Type Here to Get Search Results !

15th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


15th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பணவீக்க அடிப்படையிலான வருடாந்திர மொத்த விற்பனை விலை குறையீட்டு எண்
  • பணவீக்க அடிப்படையிலான வருடாந்திர மொத்த விற்பனை விலை குறையீட்டு எண் உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் (நவம்பர் 2025) 2011 - 2012-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ள இந்த குறியீடு, பணவீக்க விகிதம் எதிர்மறையாக உள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
  • உணவுப் பொருட்கள், கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, அடிப்படை உலோக உற்பத்தி மற்றும் மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைந்துள்ளதை இந்த மொத்த விற்பனை விலை குறியீடு அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
  • கடந்த 3 மாதங்களில் முதன்மையான பொருட்களின் மொத்த விற்பனை விலை குறியீடு மற்றும் வருடாந்திர பணவீக்க விகிதம் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது.
  • இதேபோன்று எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் குறியீடுகளும் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளதை காண முடிகிறது. இருந்தபோதிலும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மொத்த விலைக் குறியீட்டு எண் சற்று குறைந்துள்ளது.
  • எனினும் உணவுப் பொருட்களின் மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக முந்தைய மாதத்துடன் (அக்டோபர் 2025) ஒப்பிடுகையில் 0.71 சதவீதம் கூடுதலாகும்.
  • வருடாந்திர பணவீக்க விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த ஏற்றத்தாழ்வு காரணமாக மொத்த விற்பனை விலை குறியீடு அதிகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைமை தகவல் ஆணையராக ராஜ்குமார் கோயல் நியமனம்
  • முன்னாள் இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரியான ராஜ்குமார் கோயல் அவர்கள், இந்தியாவின் புதிய தலைமை தகவல் ஆணையராக (CIC) இன்று (டிசம்பர் 15, 2025) பதவியேற்றுக் கொண்டார்.
  • தலைமைத் தகவல் ஆணையருக்கான பெயரைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு கடந்த வாரம் பரிந்துரைத்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • ராஜ்குமார் கோயல் 1990 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். இவர் அருணாச்சல பிரதேசம்-கோவா-மிஸோரம்-யூனியன் பிரதேச (AGMUT) பிரிவைச் சேர்ந்தவர்.
  • இவர் கடந்த ஆகஸ்ட் 31, 2025 அன்று மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நீதித்துறைச் செயலாளராகப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel