
18th NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
16ஆவது நிதிக் குழு அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமா்ப்பிப்பு
- மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே வரிகள் பகிா்ந்தளிக்கும் கொள்கையை உருவாக்கும் பொறுப்பை உடைய 16-ஆவது நிதிக் குழுவின் அறிக்கை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் திங்கள்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது.
- மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி மற்றும் மானியங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதற்கான புதிய அளவுகோல்களை இந்த அறிக்கை வரையறுக்கும்.
- 2026-27-ஆம் ஆண்டு முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த அறிக்கை அமலுக்கு வரவுள்ளது. 16-ஆவது நிதிக் குழுவின் தலைவா் அரவிந்த் பனகாரியா மற்றும் பிற உறுப்பினா்கள் குடியரசுத் தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து அறிக்கையைச் சமா்ப்பித்தனா்.
- முன்னதாக, என்.கே. சிங் தலைமையிலான 15-ஆவது நிதிக் குழு, 2021-22 முதல் 2025-26 வரையிலான 5 ஆண்டு காலத்துக்கு மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 41 சதவீதத்தை மாநிலங்களுக்குப் பகிா்ந்தளிக்கப் பரிந்துரை செய்திருந்தது. இது 14-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்த அதே பங்கீட்டு விகிதமாகும்.
- நிதிக் குழு என்பது மத்திய-மாநில அரசுகளின் நிதி உறவுகளுக்குச் சட்டபூா்வமான ஆலோசனைகளை வழங்கும் அரசமைப்புச் சட்ட அமைப்பாகும்.
- 16-ஆவது நிதிக் குழு, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற அதிகாரியான ஆனி ஜாா்ஜ் மேத்யூ, பொருளாதார நிபுணா் மனோஜ் பாண்டா ஆகியோா் முழு நேர உறுப்பினா்களாகவும், எஸ்பிஐ குழுமத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் சௌம்யகாந்தி கோஷ், ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா் டி. ரபி சங்கா் ஆகியோா் பகுதி நேர உறுப்பினா்களாகவும் உள்ளனா்.
- மாநிலங்களுக்கான வரிப் பகிா்வு விகிதத்தைத் தீா்மானிப்பதற்கு முன், இந்தக் குழு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குச் சென்று, அவற்றின் நிதி நிலைமைகளை விரிவாக ஆய்வு செய்தது.
- உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டில் உள்ள கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 25 மீட்டர் சென்டர் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங் 584 -18x புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- உக்ரைனின்பாவ்லோ கொரோஸ்டிலோவ் 584 - 29x புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார். பிரான்ஸின் யான் பியர்லூயிஸ் ஃப்ரிட்ரிசி 583 --18x புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
- இந்தத் தொடரை இந்திய அணி 3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 13 பதக்கங்கள் பெற்று 3-வது இடத்துடன் நிறைவு செய்தது.
- சீனா 12 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம் என 21 பதக்கங்களை குவித்து முதலிடம் பிடித்தது. தென் கொரியா: 7 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 14 பதக்கங்கள் பெற்று 2-வது இடம் பிடித்தது.
- பிரேசிலில் பெலேம் நகரில் 2025 நவம்பர் 17 அன்று நடைபெற்ற சிஓபி 30 மாநாட்டில் சர்வதேச புலிகள் கூட்டணி குறித்த உயர்நிலை அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரையாற்றினார்.
- ஒருங்கிணைந்த பருவநிலை மற்றும் பல்லுயிர் பெருக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக புலிகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்க புதுப்பிக்கப்பட்ட உலகளாவிய ஒத்துழைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
- இந்தக் கூட்டத்திற்கு நேபாள அரசின் வேளாண்மை மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் டாக்டர் மதன் பிரசாத் பரியார் தலைமை தாங்கினார்.

