
19th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலகக் கோப்பை வில்வித்தை 2025 ஜோதி சுரேகா வெண்கலம் வென்றார்
- உலகக் கோப்பை வில்வித்தை போட்டியின் 8-வது சீசன் சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜோதி சுரேகா, உலகின் 2-ம் நிலை வீராங்கனையான கிரேட் பிரிட்டனின் எலா கிப்சனுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
- இதில் ஜோதி சுரேகா 150-145 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலகக் கோப்பை வில்வித்தை இறுதி தொடரில் காம்பவுண்ட் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஜோதி சுரேகா படைத்துள்ளார்.
- ஜூனியா் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், தன்வி சா்மா 7-15 12-15 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் அன்யபட் பிசிட்பிரீசசாக்கிடம் வீழ்ந்தார். எனினும், அவர் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
- கடந்த காலங்களில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருந்த இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் தங்கம், வெள்ளி என இரண்டு பதக்கங்களையும், இன்னொரு வீராங்கனை அபர்னா போபட் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
