Type Here to Get Search Results !

4th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


4th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

அத்தியாவசிய கனிமங்களின் மறுசுழற்சிக்கு ரூ. 1500 கோடி ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • இரண்டாம் நிலை ஆதாரங்களில் இருந்து அத்தியாவசிய கனிமங்களை பிரித்தெடுத்து உற்பத்தி செய்வதற்காக நாட்டின் மறுசுழற்சி திறனை ஊக்குவிக்க 1500 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • தேசிய அத்தியாவசிய கனிமங்கள் இயக்கத்தின் ஒரு பகுதியான இந்தத் திட்டம், முக்கியமான கனிமங்களில் உள்நாட்டு திறனையும் விநியோகச் சங்கிலி நெகிழ்தன்மையையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலநிலை நிதியாண்டு 2025-26 முதல் நிதியாண்டு 2030-31 வரையிலான ஆறு ஆண்டுகளாகும். இந்தத் திட்டம், அத்தியாவசிய கனிமங்களை பிரித்தெடுப்பதில் ஈடுபடும் மறுசுழற்சி மதிப்புச் சங்கிலிக்கு ஊக்கத்தொகையை வழங்கும்.
  • திட்டத்திற்கான ஊக்கத்தொகைகள் ஆண்டுக்கு குறைந்தது 270 கிலோ டன் மறுசுழற்சி திறனை வளர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் 40 கிலோ டன் முக்கிய கனிமங்கள் உற்பத்தி செய்யப்படும். 
  • இந்தத் திட்டம் சுமார் 8,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் என்றும், 70,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதாரத்துறையில் புதுமைக் கண்டுபிடிப்பு சூழலை வலுப்படுத்த ஃபைசர் நிறுவனத்துடன், டிபிஐஐடி ஒப்பந்தம்
  • சுகாதார பராமரிப்பில் புதுமைக் கண்டுபிடிப்பு சூழல் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உள்நாட்டு தொழில், வர்த்தக மேம்பாட்டு துறையான டிபிஐஐடி, ஃபைசர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 
  • இந்த ஒப்பந்தம் மருந்து துறையில் புதுமை கண்டுபிடிப்பு நிறுவனங்களுக்கு நிதி ஆதரவு, நிதி சாராத ஆதரவு என இரண்டையும் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
  • மருந்து துறையில் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி சாராத ஆதரவானது ஆய்வகங்களில் இருந்து சந்தைக்கான பயணத்தை விரைவுபடுத்தும். 
  • டிபிஐஐடியால் அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு தலா 60 லட்ச ரூபாய் உதவி வழங்கப்படுவதுடன் 18 மாத தொழில் வழிகாட்டுதலும் வழங்கப்படும்.
புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க டிபிஐஐடி-யும், ஐசிஐசிஐ வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • மத்திய வர்த்தக  அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உள்நாட்டு வர்த்தக, தொழில் மேம்பாட்டுத் துறையான டிபிஐஐடியும், ஐசிஐசிஐ வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. 
  • புத்தொழில் நிறுவனங்களுக்கும், புதுமை கண்டுபிடிப்பாளர்களுக்கும் ஆதரவளிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டிபிஐஐடியால் அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி ஆதரவளிக்கும். 
  • ஸ்டார்ட் அப் இந்தியா இணைய தளத்தின் மூலம் ஐசிஐசிஐ வங்கி ஆதரவு திட்டங்களை  செயல்படுத்தும் இத்திட்டத்தின் மூலம் நிறுவனங்களுக்கான பயிலரங்குகள் நடத்தப்படுவதுடன் சந்தைப் படுத்துதல் வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel