
23rd SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழகத்துக்கு தொடர்ந்து 8வது முறை சிறந்த உடலுறுப்பு தானத்துக்கான விருது
- சென்னை கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சார்பில் "உறுப்பு தான தினம் - 2025" உறுப்பு கொடையாளர் குடும்பத்தினருக்கு சிறப்பு செய்தல் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- உடலுறுப்பு தானம் செய்த 268 குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவர்களின் தியாகத்தை போற்றுவதும், மாற்று அறுவை சிகிச்சை சிறப்பாக செய்த மருத்துவர்களுக்கும் பாராட்டு நிகழ்வு நடைபெறுகிறது.
- தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2008 செப்டம்பர் 5ம் தேதி மூளை சாவடைந்தவர்களிடமிருந்து உடலுறுப்பு பெரும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உருவானது.
- 2024ம் ஆண்டில் 268 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளது. இதனை பாராட்டி மத்திய அரசு, உடலுறுப்பு தானத்தில், சிறந்த மாநிலம் என்ற விருது அளித்துள்ளது.
- தொடர்ந்து எட்டு முறை தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்திற்கான விருதை பெற்றிருக்கிறது.
- முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கு பிறகு இதுவரை 522 பேர் உடல் உறுப்பு செய்துள்ளார்கள். 23189 பேர் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளார்கள்.
Ballon d'Or விருது 2025
- சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் Ballon d'Or விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை நடப்பு ஆண்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் நிலவியது.
- ஏனெனில், இந்த முறை மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. ஆகஸ்ட் 2024 முதல் ஜூலை 2025 வரையிலான வீரர்களின் செயல்பாடு இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
- பிரெஞ்சு இதழான 'பிரான்ஸ் ஃபுட்பால்' கடந்த 1956 முதல் இந்த விருதை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு வழங்கி வருகிறது. விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வீரர்களில் இருந்து சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்.
- நடப்பு ஆண்டுக்கான Ballon d'Or விருதை வென்றுள்ளார் பிரான்ஸ் நாட்டு கால்பந்து அணியின் முன்கள வீரர் டெம்பெல்லே. அவர் கிளப் அளவில் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார்.
- 2024-25 சீசனில் பிஎஸ்ஜி அணிக்காக சிறந்த பங்களிப்பை அவர் வழங்கினார். அது அந்த அணியின் வெற்றிக்கு உதவியது. மகளிருக்கான தங்கப் பந்து விருதை பார்சிலோனாவின் கால்பந்து வீராங்கனை அய்டானா பொன்மட்டி வென்றுள்ளார்.
- தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இந்த விருதினை வென்ற முதல் வீராங்கனை என்ற புதிய சாதனையை பொன்மட்டி படைத்துள்ளார்.
- ஸ்பெயினைச் சேர்ந்த அய்டானா பொன்மட்டி (27 வயது) பார்சிலோன அணியில் விளையாடி வருகிறார்.

