Type Here to Get Search Results !

17th JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


17th JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

குடியரசுத் தலைவர் 2024–25ம் ஆண்டின் தூய்மைப் பணி கணக்கெடுப்பிற்கான விருதுகளை வழங்கினார்
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், 2024-25-ம் ஆண்டிற்கான தூய்மை பணி கணக்கெடுப்பிற்கான விருதுகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். 
  • இந்த விழாவில், மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், அத்துறைக்கான இணையமைச்சர் திரு டோகன் சாஹு முன்னிலையில், நாட்டில் தூய்மைப் பணிகளைத் திறம்பட மேற்கொண்ட 23 நகரங்கள் பாராட்டுதல்களைப் பெற்றன. 
  • இந்தியாவின் புதிய தலைமுறைக்கான நகரங்களாக, அகமதாபாத், போபால், லக்னோ போன்றவை சிறந்த தூய்மை நகரங்களாக உருவெடுத்துள்ளன. மஹாகும்ப மேளாவிற்கான சிறப்பு அங்கீகாரம் உட்பட 43 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • 2024-25-ம் ஆண்டிற்கான தூய்மைக்கான விருது வழங்கும் விழாவில், மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், சிறந்த கங்கா நகரத்திற்கான விருதை பிரயாக்ராஜு நகருக்கு வழங்கினார். 
  • செகந்திராபாத் கண்டோன்மென்ட் பகுதி, சுகாதார முயற்சிகளுக்கான சிறந்த கண்டோன்மென்ட் வாரியமாக கௌரவிக்கப்பட்டது. 
  • துப்புரவுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கான சிறந்த அர்ப்பணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஜிவிஎம்சி விசாகப்பட்டினமும், ஜபல்பூர், கோரக்பூர் ஆகியவை சிறந்த துப்புரவுப் பணியாளர்களுக்கான பாதுகாப்பான நகரம் என அறிவிக்கப்பட்டன. 
  • ஏராளமான மக்கள் பங்கேற்ற உலகின் மிகப்பெரிய விழாவான மஹாகும்ப மேளாவின் போது, சிறப்பான நகர்ப்புற கழிவு மேலாண்மையை திறம்பட மேற்கொண்டதாக உத்தர பிரதேச மாநில அரசு, பிரயாக்ராஜ் மேளா சிறப்பு அதிகாரி மற்றும் பிரயாக்ராஜ் நகராட்சிக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது. 
உயரமான பகுதியில் ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பின் சோதனை வெற்றி
  • ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பின் உயரமான பகுதிகளில் இலக்குகளை தாக்கும் பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.  
  • லடாக்கில் நேற்று (16.07.2025) இந்த சோதனை  நடத்தப்பட்டது. இந்த ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை  4,500 மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்த முடியும்.  இது 25 முதல் 30 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டது.
  • ராணுவ வான் பாதுகாப்பு அமைப்பும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-வும் இணைந்து பாரத் டைனமிக்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இதனை உருவாக்கியுள்ளன. 
  • நாட்டின் ஏவுகணை  மேம்பாட்டுத் திட்டங்களில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும். இந்த சாதனைக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel