
14th JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2025 - தங்கம் வென்றார் சுருச்சி சிங்
- ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுருச்சி சிங் 241.9 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
- பிரான்ஸின் காமில் ஜெட்ரெஜெவ்ஸ்கி (241.7) வெள்ளிப் பதக்கமும், சீனாவின் குயன்ஸுன் யாவோ (221.7) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
- ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது.
- அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 212 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 66, வெப்ஸ்டர் 72 ரன்கள் எடுத்தார்கள்.
- தென்னாபிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை மிகச்சிறப்பாக பௌலிங் செய்த ஆஸ்திரேலியா வெறும் 138 ரன்களுக்கு சுருட்டி வீசி 74 ரன்கள் முன்னிலை பெற்றது.
- அதிகபட்சமாக டேவிட் பேடிங்கம் 45, கேப்டன் பவுமா 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
- அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவை மிகச்சிறப்பாக பௌலிங் செய்த தென் ஆப்பிரிக்கா 207 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 58*, அலெக்ஸ் கேரி 43 ரன்கள் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 4, லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
- இறுதியில் 282 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு துவக்க வீரர் ஐடன் மார்க்ரம் ஐசிசி ஃபைனலில் சதத்தை அடித்த முதல் தென்னாபிரிக்க வீரராக சாதனை படைத்து 136 (207) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.
- இறுதியில் கெய்ல் வேரின் 7*, பேடிங்கம் 21* ரன்கள் எடுத்ததால் 285/5 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
- அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்று தென்னாபிரிக்கா சாதனை படைத்தது. அதை விட 1998 நாக் அவுட் டிராபிக்கு பின் 27 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்கா முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்தது.