
12th JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து
- குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் சரியாக இன்று பிற்பகல் 1.38 மணிக்கு ஓடுதளத்தில் இருந்து புறப்படும் விமானம் சில விநாடிகளில் பறக்கத் தொடங்குகிறது.
- அடுத்த 20 விநாடிகளில் மேலே பறக்க முடியாமல் தள்ளாடியபடி தரையை நோக்கி வரும் விமானம், மருத்துவக் கல்லூரியின் கட்டடத்தில் மோதி வெடித்துச் சிதறுகிறது.
- இதன்மூலம் விமானம் பறக்கத் தொடங்கியவுடன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானி கட்டுப்பாட்டு அறைக்கு ’மே டே’ அறிவித்திருப்பது தெரியவருகின்றது.
- இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 242 பேர் பயணித்த நிலையில், இதுவரை 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டுமே காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- 2024 மே மாதத்துடன் ஒப்பிடும் போது, 2025மே மாத பணவீக்க விகிதம் ஆண்டுக்கு ஆண்டு என்ற முறையில் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் 2.82% ஆக உள்ளது.
- 2025 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 மே மாதத்தில் பணவீக்கம் 34 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது. 2019 பிப்ரவரி மாதத்திற்கு பிறகு இது மிகக் குறைந்த பணவீக்க விகிதமாகும்.
- 2024 மே மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025 மே மாதத்திற்கான உணவு பணவீக்க விகிதம் 0.99%-ஆக இருந்தது. 2025 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 மே மாதத்தில் உணவுப் பணவீக்க விகிதம் 79 அடிப்படைப் புள்ளிகள் சரிவுடன் காணப்படுகிறது.
- 2025 மே மாத பணவீக்கம் மற்றும் உணவுப் பணவீக்கத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சரிவுக்கு காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், இறைச்சி, தானியங்கள், சர்க்கரை, முட்டை போன்றவற்றின் பணவீக்கம் குறைந்ததே முக்கியக் காரணமாகும்.
- 2025 ஏப்ரல் மாதத்தில் 2.59% ஆக இருந்த கிராமப்புற உணவுப் பணவீக்கம் 2025 மே மாதத்தில் மாற்றமின்றி 2.59% ஆகவே காணப்பட்டது.
- 2025 ஏப்ரல் மாதத்தில் நகர்ப்புற பணவீக்கம் 3.36%-மாக இருந்த நிலையில், 2025 மே மாதத்தில் அது 3.07%-ஆக குறைந்து காணப்பட்டது. உணவுப் பணவீக்கம் 2025 ஏப்ரல் மாதத்தில் 1.64%-லிருந்து 2025 மே மாதத்தில் 0.96% ஆக குறைந்துள்ளது.
- 2025 மே மாதத்தில் வீட்டுவசதி பணவீக்க விகிதம் 3.16% ஆக இருந்தது. இது 2025 ஏப்ரல் மாதத்தில் விகிதம் 3.06% ஆக இருந்தது.
- 2025 மே மாதத்திற்கான நகர்ப்புற மற்றும் கிராமப்புற கல்வி பணவீக்க விகிதம் 4.12%-ஆகும். இது 2025 ஏப்ரல் மாதத்தில் 4.13%-ஆக இருந்தது.
- 2025 மே மாதத்திற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார பணவீக்க விகிதம் 4.34%-ஆகும். இது 2025 ஏப்ரல் மாதத்தில் 4.25%-ஆக இருந்தது.
- 2025 மே மாதத்திற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பணவீக்க விகிதம் 3.85%-ஆகும். இது 2025 ஏப்ரல் மாதத்தில் விகிதம் 3.67%-ஆக இருந்தது.
- 2025 மே மாதத்திற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற எரிபொருள் மற்றும் மின் கட்டண பணவீக்க விகிதம் 2.78%-ஆகும். இது 2025 ஏப்ரல் மாதத்தில் 2.92%மாக இருந்தது.
- 2025–26 கோடைக்கால பயிர் பருவத்திற்காக ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொள்முதல் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மொத்தம் 54,166 மெட்ரிக் டன் பாசிப்பயறு கொள்முதல் செய்வதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த திட்டத்தின் கீழ் 2025–26 கோடை பயிர் பருவத்திற்காக உத்தரப் பிரதேசத்தில் 50,750 மெட்ரிக் டன் நிலக்கடலை கொள்முதல் செய்வதற்கும் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இந்தக் கூட்டத்தின் போது, மாநில விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், ஆந்திரப் பிரதேசத்தில் கொள்முதல் காலத்தை மேலும் 26.06.25 தேதி வரை என 15 நாட்களுக்கு நீட்டிப்புச் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்.
- விவசாயிகளை ஊக்குவிக்கவும், இறக்குமதியை நாடு சார்ந்திருப்பதைக் குறைக்கவும், உள்நாட்டு பருப்பு வகைகளின் உற்பத்தியை மேம்படுத்தவும், 2024–25 கொள்முதல் ஆண்டிற்கு அந்தந்த மாநிலத்தின் உற்பத்தியில் 100 சதவீதம் வரை கொள்முதல் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் மசூர் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
- மேலும், 2028–29 வரை கூடுதலாக நான்கு ஆண்டுகளுக்கு இந்த முயற்சி தொடரும் என்று 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், மத்திய அரசு அறிவித்தது.
- பிரதமரின் விவசாயிகளின் வருமானத்தை பாதுகாக்கும் திட்டம் என்ற ஒருங்கிணைந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இது விலை ஆதரவு திட்டம், விலை பற்றாக்குறையை சரி செய்யும் திட்டம், சந்தை தலையீட்டு திட்டம் மற்றும் நிலையான விலைக்கான நிதி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
- இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உறுதியான மற்றும் லாபகரமான விலைகளை உறுதி செய்வதாகும்.
- இதன் மூலம் அவர்களின் வருமானத்தைப் பாதுகாப்பதும், சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
- அறுவடை காலத்தில் அறிவிக்கப்பட்ட பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கொப்பரை ஆகியவற்றின் சந்தை விலைகள் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறையும் போது விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்குவதற்காக கொள்முதல் விலை ஆதரவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.