
21st MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ரூ.468 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்
- நகர்ப்புற வளர்ச்சித் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னை கைலாசபுரம் திட்டப்பகுதி, விருதுநகர்- சம்பந்தபுரம், மதுரை - உச்சபட்டி , புதுக்கோட்டை- சந்தைப்பேட்டை, கள்ளக்குறிச்சி - கீரணூர்-2, திருப்பூர் - ஹைடெக் பார்க் நகர், காமராஜர்நகர் பெருந்தொழுவு, காஞ்சிபுரம் - சாலமங்கலம்-1, கடலூர் - கீழகுப்பம்-1 மற்றும் 2, பாலக்கொல்லை, திருவதிகை, ஈரோடு- கவுந்தப்பாடி, திருவாரூர்- கண்டிதம்பேட்டை, கரூர்-வேலம்பாடி திட்டப்பகுதிகளில் ரூ.527.84 கோடியில் கட்டப்பட்டுள்ள 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- இதேபோல் ரூ.207.90 கோடியில் கட்டப்பட்ட வணிக வளாகங்களை முதல்வர் திறந்து வைத்தார். மேலும், 4 இடங்களில் திறந்தவெளி விளையாட்டு மைதானங்கள், நவீன உடற்பயிற்சி பூங்காக்கள் என ரூ.14.66 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். இதுதவிர, சென்னையில் பல்வேறு பகுதிகளில் ரூ.255.60 கோடியில் 20 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.5.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 38 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 தோழி விடுதிக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
- மேலும், சென்னை - தரமணி மற்றும் சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, தேனி, சிவகங்கை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் 176.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 14 தோழி விடுதிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மே 20–22, 2025 அன்று நடைபெறும் ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (ஏபிஓ) நிர்வாகக் குழுவின் பொதுக்குழுக் கூட்டத்தின் 67வது அமர்வின் போது, 2025–26 காலத்திற்கான ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின்(ஏ.பி.ஓ.) தலைமைப் பொறுப்பை இந்தியா முறையாக ஏற்றுக்கொண்டது.
- இந்தியக் குழுவிற்கு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) செயலாளர் மற்றும் இந்தியாவுக்கான ஏபிஓ இயக்குநர் ஸ்ரீ அமர்தீப் சிங் பாட்டியா ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.
- கார்வாரில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புராதனமான மீள்கட்டுமான கப்பலுக்கு ஐஎன்எஸ்வி கவுண்டின்யா என்று பெயர் சூட்டப்பட்டு இந்தியக் கடற்படையுடன் முறைப்படி சேர்த்துக் கொள்ளப்பட்டது.
- இந்தியாவின் வளமான கப்பல் கட்டும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் அசாதாரணமான திட்டத்தின் உச்ச நிலையைக் குறிக்கும் வகையில், இந்நிகழ்ச்சி மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் நடைபெற்றது.
- ஐஎன்எஸ்வி கவுண்டின்யா என்பது அஜந்தா குகை ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள 5 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கப்பலை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட பாய்மரக் கப்பல் ஆகும்.
- மத்திய கலாச்சார அமைச்சகத்தின் நிதியுதவியுடன், இந்தியக் கடற்படை மற்றும் ஹோடி இன்னோவேஷன் நிறுவனம் இடையே 2023 - ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கையெழுத்திடப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் மூலம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
- 2023 - ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த கப்பல் கட்டுமானத்திற்கான கீல் இடப்பட்டதைத் தொடர்ந்து, கப்பலின் கட்டுமானம் கேரளாவைச் சேர்ந்த திறமையான கைவினைஞர்கள் குழுவால் பாரம்பரிய முறைப்படி மேற்கொள்ளப்பட்டது.
- தலைசிறந்த எழுத்தாளர் திரு பாபு சங்கரன் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்குப் பிறகு. பல மாதங்களாக நடைபெற்ற கட்டுமானப் பணிகளின்போது, அந்தக் குழு, தென்னை மற்றும் தேங்காய் நார், இயற்கை பிசின் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி கப்பலின் மேற்பரப்பில் மரப் பலகைகளை எவ்வித சிரமமின்றி பொருத்தியது. இந்தக் கப்பல் 2025 - ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கோவா கடற்பகுதியில் சோதித்துப் பார்க்கப்பட்டது