Type Here to Get Search Results !

2nd APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


2nd APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாடு சட்டசபையில் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் நிறைவேறியது
  • இந்திய மத்திய அரசால் தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவு 1974-ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. 
  • இதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண, கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு. 
  • இதனை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டசபையில் 4-வது முறையாக கச்சத்தீவு மீட்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. 
  • கருணாநிதி முதல்வராக இருந்த ஒரு முறையும்,, ஜெயலலிதா முதல்வராக இருந்த இரு முறையும் கச்சத்தீவு மீட்பு தீர்மானங்கள், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. 
  • தற்போது 4-வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனிநபர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் 3ம் கட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ரூ.2,106 கோடி கடன்
  • தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் 3ம் கட்டம் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட முதலீட்டு சூழலை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
  • இந்த நிலையில், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான JICA தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்காக ரூ. 2,106 கடன் வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 
  • தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் 3ம் கட்டம் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ப நிலையான, எதிர்காலம் சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் வளர்ந்து வரும் பசுமைத் துறைகளில் கவனம் செலுத்துவதாக உள்ளதாகவும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி
  • விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் பல அரியவகை தொல்பொருள்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது 2.04 மீட்டர் ஆழத்தில் 'தங்கத்தால் செய்யப்பட்ட மணி' ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த மணி, 6 மி.மீ சுற்றளவும், 4.7 மி.மீ கணமும், 22 மி.கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட 7 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
2025 மார்ச் மாத GST வரி வசூல் 
  • நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.1.96 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. 2025 பிப்ரவரி மாதம் வரித்தொகையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்த வரி வசூலானது 10% அதிகரித்துள்ளதாக நிதி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
  • இந்த வரி அதிகரிப்பு இந்தியாவில் உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel