Type Here to Get Search Results !

11th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


11th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ. 3,880 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைத்தார்
  • உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ. 3880 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.
  • வாரணாசி சுற்றுச் சாலை, சாரநாத் இடையே சாலை மேம்பாலம், நகரின் பிகாரிபூர், மண்டுவாடி சந்திப்புகளில் மேம்பாலங்கள், வாரணாசி சர்வதேச விமான நிலையத்தில் தேசிய நெடுஞ்சாலை 31-ல் ரூ.980 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஆகியவற்றுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
  • ரூ.1,045 கோடி மதிப்பிலான இரண்டு 400 கிலோவாட் மற்றும் ஒரு 220 கிலோவாட் மின் பகிர்மான துணை மின் நிலையங்களையும், அது தொடர்பான மின் வழித்தடத்தை அமைப்பதற்கான திட்டப்பணிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • தபேலா, ஓவியம், தண்டாய், திரங்கா பர்பி உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கான புவிசார் குறியீடு சான்றிதழ்களை பிரதமர் வழங்கினார்.
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் பிப்ரவரி மாதத்தில் 2.9% வளர்ச்சி
  • 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான தொழில் உற்பத்திக் குறியீட்டெண் வளர்ச்சி வீதம் 2.9 சதவீதமாக உள்ளது. இது கடந்த மாதத்தில் 5.0 சதவீதமாக இருந்தது.
  • சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 1.6 சதவீதம், 2.9 சதவீதம் மற்றும் 3.6 சதவீதமாகும். இத்துறைகளின் உற்பத்தி குறியீடுகள் முறையே 141.9, 148.6 மற்றும் 194.0 ஆக உள்ளன.
  • தொழில்துறை சார்ந்த நிறுவனங்களின் உற்பத்தி விகிதம் (உலோகங்கள்), "எஃகு குழாய்கள், எடை குறைவான எஃகு பார்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டுள்ளன.
  • மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் போன்ற வாகனங்களின் உற்பத்தி மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தி, ஆகியவையும் வளர்ச்சி கண்டுள்ளன.
எஸ்யு-30 எம்கேஐ விமானத்திலிருந்து நீண்ட தூர கிளைடு குண்டு சோதனை வெற்றி
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) 2025 ஏப்ரல் 08-ம் தொடங்கி 10-ம் தேதிக்கு இடையில் எஸ்யு-30 எம்கேஐ விமானத்திலிருந்து, கௌரவ்' எனப்படும் நீண்ட தூரம் சென்று தாக்கும் வெடிகுண்டு சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. 
  • சோதனைகளின் போது, தீவில் தரை இலக்குகளை நோக்கி 100 கி.மீ தூரம் வரை துல்லியமாகப் பயணிக்கும் திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது.
  • எல்.ஆர்.ஜி.பி 'கௌரவ்' என்பது 1,000 கிலோ கிளைட் குண்டு ஆகும். இது சந்திபூரின் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இமாராத் ஆராய்ச்சி மையம், ஒருங்கிணைந்த சோதனை வரம்பு ஆகியவற்றால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel