- தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 - 2026 / TAMILNADU AGRI BUDGET 2025 - 2026: 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.
- கரும்பு, முந்திரி, தென்னை, காய்கறிகள், நீர்ப்பாசனம், விவசாய குடும்பத்தினருக்கான உதவித்தொகைகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
- இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் மூலம், வேளாண் துறைக்கு மொத்தம் ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அப்போது, விவசாயிகளைப் பற்றி புகழ்ந்துரைக்கும் திருக்குறள், புறநானூறு பாடல்களைக் கூறி தனது உரையைத் தொடங்கினார்.
- முதலில்,
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்
திருவள்ளுவர்
- அதாவது, பல்வேறு அரசுகளை, தமது குடை நிழலின் கீழ் கொண்டு வரும் திறமை பெற்றவர்கள் உழவர்கள் என்று திருவள்ளுவர் புகழ்ந்துரைத்துள்ளார்.
- உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் அனைத்து மக்களையும் பாதுகாப்பார்கள் என்பது புறநாநூறு கூறும் சொல் என்று கூறி தனது உரையைத் தொடங்கியுள்ளார்.
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்,
குடிபுறம் தருகுவை யாயின், நின்
அடிபுறந்த தருகுவர் அடங்கா தோரே
புறநானூறு பாடல் 35
- காளை மாடுகளைப் போற்றி உழவு செய்யும் விவசாயிகளை நீ போற்றினால் அடங்காத உன் பகைவர் உன்னிடம் அடிபணிவர் என்று மன்னனுக்கு புலவர் அறிவுரை கூறும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளதாகக் கூறி உரையைத் தொடங்கியுள்ளார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
- வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றனர்.
வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
- தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 - 2026 / TAMILNADU AGRI BUDGET 2025 - 2026: வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான "டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி" உருவாக்கப்படும்.
- 100 முன்னோடி விவசாயிகள் நெல் உற்பத்தித்திறனில் சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
- உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும். உயிர்ம விவசாயிகளுக்கு இலவச உயிர்ம வாய்ப்புச் சான்றிதழ் வழங்கப்படும். உயிர்ம விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் ரூ.6.16 கோடியில் அமைக்கப்படும்.
- உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீட்டுக்கு எடுத்துச் சென்று வழங்கிட உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும்.
- நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- மின்சார இணைப்பு இல்லாத 1000 விவசாயிகளுக்கு தனித்துச் சூரியசக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் வழங்க ரூ.24 கோடி ஒதுக்கீடு.
- சிறு, குறு விவசாயிகளின் பயனுக்காக 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ரூ.10.50 கோடியில் உருவாக்கப்படும்.
- முந்திரியின் பரப்பு, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு முந்திரி வாரியம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும்.
- வெங்காயத்தின் விளைச்சல் குறையும் காலங்களில் சந்தைக்கு நிலையான வரத்தினை உறுதிப்படுத்திடும் பொருட்டு வெங்காய சேமிப்புக்கூடங்கள் ரூ.18 கோடியில் அமைக்கப்படும்.
- காவிரி, கல்லணை.. 2,925 கி.மீ நீளத்திற்கு தூர்வாரும் பணிகள்.
- ரூ.52.44 கோடியில் சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் தொடங்கப்படும்.
- பசுமைத் தமிழ்நாட்டை உருவாக்க "தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை" உருவாக்கப்படும்.
- மானாவாரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியம் வழங்கப்படும்.
- விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிக்கப்பட்டுக் கொள்முதல் செய்யப்படும்.
- ரூ.42 கோடியில் 1,000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.
- கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- கோடைகாலங்களில் சாகுபடிக் குறைவால் ஏற்படும் காய்கறிகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்திடவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திடவும் முக்கிய காய்கறிகளை ஏப்ரல், மே மாதங்களில் சாகுபடி செய்திட ரூ.10.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- ரூ.1 கோடியில் உதிரிவகை ரோஜா மலர்களின் சாகுபடி 500 ஏக்கரில் மேற்கொள்ள நறுமண ரோஜாவுக்கான சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும்.
- 17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக ரூ.215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ரூ.50 கோடியில் வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் அமைக்கப்படும்.
- ரூ.1.35 கோடியில், காலநிலை மாற்றத்தினால் விவசாயம் மற்றும் சுற்றுசூழலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள திறனுடைய கிராமங்கள் உருவாக்கப்படும்.
ENGLISH
- TAMILNADU AGRI BUDGET 2025 - 2026: Agricultural Financial Statement for the financial year 2025-26 Pannirselvam filed the legislative session. He then announced various welfare schemes for the farmers.
- Important announcements on sugarcane, cashews, coconut, vegetables, irrigation and agricultural family scholarships have been issued. At that time, Thirukkural, who praised the farmers, began his speech by saying suburban songs.
- That is, Thiruvalluvar has praised various states that they are capable of bringing under their umbrella shade. He has started his speech by saying that it is a suburban word that the farmers are protected and protect all the people.
- With the agricultural budget being filed, all the DMK legislators participated in the legislative session wearing a green piece.
The main features featured in the Agricultural Budget
- TAMILNADU AGRI BUDGET 2025 - 2026: "Dr. MS Swaminathan Research Fund" for innovations in agriculture will be created.
- 100 pioneer farmers will be taken to Japan, China and Vietnam, which are achieved in paddy productivity.
- The award will be given to 3 farmers who excel in vowel agriculture. Free Bio -Opportunity Certificate will be given to life farmers. Incentives will be given to biomass farmers.
- Standards for the biomass in Chennai, Coimbatore, Thoothukudi and Madurai will be set up at Rs. 6.16 crore.
- The tiller market will be linked to the local internet trade to deliver vegetables to the consumer home.
- For the benefit of small and marginal farmers, 130 agricultural machinery centers will be built at Rs.10.50 crore.
- The Tamil Nadu Cashew Board will be set up at Rs 10 crore to increase the production of cashews, to promote cashew -based businesses and to protect the welfare of workers involved in the cashew industry.
- The Tamil Nadu Corporation Movement will be launched to increase the area, production and productivity of small crops at Rs 52.44 crore.
- The "Tamil Nadu Agricultural Policy" will be created to create Green Tamil Nadu.
- A subsidy of Rs.
- 3,000 metric tonnes of seeds will be purified and purchased by agricultural manufacturers.
- 1,000 Chief Minister's Farmers Welfare Service Centers will be set up at Rs 42 crore.
- Rs 10.50 crore will be allocated for cultivation of major vegetables in April and May to control the price of vegetables caused by the decrease in cultivation in the summer.
- A special scheme for aromatic rose will be developed for the cultivation of spare rose flowers at Rs 1 crore.
- Agricultural machinery and equipment will be subsidized to 17,000 farmers. Rs 215 crore has been allocated for this project.
- 100 crores of agricultural products will be set up at Rs 50 crore.