Type Here to Get Search Results !

8th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


8th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025
  • 70 தொகுதிகளை கொண்ட நாட்டின் தலைநகரான டெல்லி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஐந்தாம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில், இதன் வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
  • வாக்கு எண்ணும் பணியில் 5000 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 19 மையங்களில் வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அதைத்தொடர்ந்து மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
  • இந்த சூழலில் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மியின் நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். 40 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியைபிடிக்கவிருக்கிறது பாஜக கட்சி.
  • முன்னாள் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், புது டெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். அதேபோல மணீஷ் சிசோடியாவும் ஜங்புரா தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார்.
இந்திய கடற்படைக்கு 28 இஓஎன்-51 அமைப்புகளுக்காக பிஇஎல் நிறுவனத்துடன் ரூ. 642 கோடி புரிந்துணர்வு  ஒப்பந்தம்
  • பாதுகாப்பு அமைச்சகம், இன்று (2025 பிப்ரவரி 08) புதுதில்லியில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) நிறுவனத்துடன் 11 புதிய தலைமுறை கடல் ரோந்து கப்பல்களுக்கான 28 இஓஎன்-51 அமைப்புகளுக்கும் இந்திய கடற்படைக்கு மூன்று கேடட் பயிற்சி கப்பல்களை வாங்குவதற்குமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • இஓஎன்-51 என்பது எலக்ட்ரோ ஆப்டிகல் தீ கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். இது எலக்ட்ரோ ஆப்டிகல், தெர்மல் இமேஜர்ஸ் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இலக்குகளைத் தேடுதல், கண்டறிதல், வகைப்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்கிறது. 
  • இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளில் பல வேலைவாய்ப்பை உருவாக்கும். அத்துடன் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு இந்திய தொழில்துறைகளின் தீவிர பங்கேற்பை ஊக்குவிக்கும். 
  • பாதுகாப்பில் 'தற்சார்பு' என்ற இலக்கை அடைவதற்கான அரசின் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை இது வழங்கும்.
15வது ஏரோ இந்தியா சர்வதேச கருத்தரங்கு பெங்களூரில் தொடங்கியது
  • இரு வருட ஏரோ-இந்தியா சர்வதேச கருத்தரங்கின் 15-வது பதிப்பு இன்று (2025 பிப்ரவரி 08) கர்நாடகாவின் பெங்களூருவில் தொடங்கியது. பாதுகாப்பு ஆராய்ச்சி - மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) இராணுவ விமான தகுதி சான்றிதழ் மையம் (செமிலாக்), ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா (ஏஎஸ்ஐ) உடன் இணைந்து ஏரோ இந்தியா 2025-க்கு முன்னோடியாக இரண்டு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்தக் கருத்தரங்கு உலகளாவிய விண்வெளி அரங்கில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த ஆண்டு கருப்பொருள் 'எதிர்கால விண்வெளி தொழில்நுட்பங்கள்: வடிவமைப்பு சரிபார்ப்பில் சவால்கள்' என்பதாகும். 
  • எதிர்கால விண்வெளி தொழில்நுட்பங்களில் வளர்ந்து வரும் போக்குகள், ராணுவ விமானத் தகுதி சான்றிதழ், வடிவமைப்பு, சோதனை ஆகியவற்றில் உள்ள சவால்கள் குறித்த விவாதங்களும் அதற்கான தீர்வுகளும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel