
APPA எனும் பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்
- தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கடலூரில் நடைபெற்று வரும் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' விழாவில், 'அப்பா' என்ற புதிய செயலியை வெளியிட்டுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- தமிழ்நாடு மாநிலப் பெற்றோர், ஆசிரியர் கழகம் சார்பில் 7வது மண்டல மாநாடாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.
- பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக பிகே மிஸ்ரா என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ்க்கு தற்போது நரேந்திர மோடியின் முதன்மை செயலாளர் -2 ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- அவரது நியமனத்துக்கு அமைச்சரவையில் நியமன குழு ஒப்புதல் அளித்த நிலையில் பணியாளர் பயிற்சி துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.