Type Here to Get Search Results !

19th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


19th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,554 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்
  • 2024ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள், புயல் ஆகியவற்றிற்காக உயர்மட்டக் குழு பரிந்துரையின்படி ஆந்திரா, தெலங்கானா, நாகாலாந்து, ஒடிசா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு ரூ.1554.99 கோடி கூடுதல் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 
  • ஏற்கனவே 27 மாநிலங்களுக்கு ரூ.18,322.80 கோடி நிதி விடுக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆனால். ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்காக ரூ.37 ஆயிரம் கோடி நிதி வழங்க கோரிக்கை வைத்தும், தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
பீகார், ஹரியானா, சிக்கிம் மாநில ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பதினைந்தாவது நிதிக்குழு மானியம் விடுவிப்பு
  • பீகார், ஹரியானா, சிக்கிமில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் பதினைந்தாவது நிதிக்குழு மானியத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. 
  • பீகார் மாநிலத்திற்கு 2-வது தவணையாக ரூ.821.8021 கோடியையும், நிபந்தனையற்ற மானியங்களின் முதல் தவணையில் நிலுவையாக இருந்த ரூ.47.9339 கோடியும் அளிக்கட்டுள்ளது.  
  • ஹரியானாவில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகள் 2-வது தவணையாக ரூ.202.4663 கோடி மதிப்பிலான நிபந்தனையற்ற மானியத் தொகையையும், நிபந்தனையற்ற மானியத் தொகையின் முதல் தவணையில் நிலுவையாக உள்ள ரூ.7.5993 கோடியும் பெறும். 
  • சிக்கிம் மாநிலத்திற்கு 2024-25-ம் நிதியாண்டில் ரூ.6.2613 கோடி மதிப்புள்ள இரண்டாவது தவணையாக நிபந்தனையற்ற மானியத்தைப் பெறுகிறது.
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் மற்றும் அர்க்யம் ஆகியவை நீர், துப்புரவு, தூய்மை (வாஷ்) பிரிவில் மின்னணு பொது உள்கட்டமைப்பை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் 
  • டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவுநிறுவனம் மற்றும் அர்க்யம் ஆகியவை நீர், துப்புரவு, தூய்மை (வாஷ்) பிரிவுக்கான மின்னணு பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 
  • இந்த முயற்சி மின்னணு தீர்வுகள் மூலம் நீர், சுகாதார சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் முயற்சியுடன் ஒத்திசைவானதாக உள்ளது.
  • நீர்வள இயக்கம், தூய்மை பாரத இயக்கம் ஆகியவற்றை ஆதரிப்பதற்காக மின்னணு சூழல் அமைப்பை வடிவமைத்து செயல்படுத்துவதை இந்த கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நீர் வளங்களைப் பராமரிப்பதற்கு அரசு நிறுவனங்களை வலுப்படுத்தல், நிலையான நீர் மேலாண்மைக்கான பங்கேற்பு மின்னணு தளங்களை உருவாக்குதல் ஆகியவை கவனம் செலுத்தப்படும் முக்கியப் பகுதிகளாகும்.
இந்தியாவிற்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையில் லித்தியம் துரப்பணப் பணி மற்றும் சுரங்கத் துறைகளில் ஒத்துழைப்பிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, சுரங்கத்துறைச் செயலாளர், மற்றும் துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் அர்ஜென்டினாவின் கட்டமர்கா மாகாண ஆளுநர் திரு ரவுல் அலெஜான்ட்ரோ ஜலீலை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினர். 
  • சுரங்கத்துறையில், குறிப்பாக லித்தியம் துரப்பணப் பணி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டன. 
  • சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான கனிம ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் (MECL) அர்ஜென்டினாவின் கேடமார்கா மாகாண அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த கூட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக இந்த ஒப்பந்தம் விளங்குகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel