Type Here to Get Search Results !

15th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


15th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மருங்கூரில் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டெடுப்பு
  • பண்ருட்டி அடுத்த மருங்கூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
  • 360 செ.மீ. ஆழத்தில் 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினால் ஆன பொருள் பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் இதுவரை இரும்பு பொருட்கள், காசுகள், அஞ்சனக் கோல் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதிய கண்டுபிடிப்பின் மூலம் மருங்கூரில் சங்கு அறுக்கும் தொழில் நடைபெற்றுள்ளது தெரிகிறது என தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே.பி.நட்டா ஜஜ்ஜார் எய்ம்ஸ்-ஸில் புற்றுநோய் தொடர்பான மாநாட்டைத் தொடங்கி வைத்தார்
  • மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா ஜஜ்ஜார் எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள எய்ம்ஸ் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் 2-வது எய்ம்ஸ் புற்றுநோயியல் மாநாடு 2025-ஐ இன்று (15.02.2025) தொடங்கி வைத்தார். 
  • ஜஜ்ஜார் எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனம் (என்சிஐ) இந்தியாவின் மிகப்பெரிய பொது சுகாதார நிறுவனங்களில் ஒன்றாகும். இது புதுமையான புற்றுநோய் பராமரிப்பு, ஆராய்ச்சி திறன்களைக் கொண்டுள்ளது. 
  • எய்ம்ஸ் புற்றுநோயியல் மாநாடு, இந்தியாவின் அனைத்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களிலும் புற்றுநோயியல் துறையில் உள்ள முன்னணி நிபுணர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • புற்றுநோய் பராமரிப்பு, சிகிச்சை முறைகள், தற்போதைய ஆராய்ச்சி முயற்சிகள் ஆகியவற்றில் முன்னேற்றங்கள் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel