Type Here to Get Search Results !

22nd DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


22nd DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது
  • பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குவைத் நாட்டிற்குச் சென்றுள்ளார். அதன்படி முதல் நாளான நேற்று (21.12.2024) பிரதமர் மோடிக்கு அரசு சார்பிலும், இந்தியர்கள் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • இந்நிலையில் இந்த பயணத்தின் இரண்டாவது நாளான இன்று (22.12.2024) அந்நாட்டின் இளவரசரைச் சந்தித்து பேசினார். அப்போது குவைத் நாட்டின் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான, 'ஆப் முபாரக் அல் கபீர்' விருது வழங்கப்பட்டது.
  • இதன் மூலம் பிரதமர் மோடிக்குக் கிடைத்த 20வது சர்வதேச விருது இதுவாகும். முன்னதாக 19 நாடுகள் சார்பில் பிரதமர் மோடிக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
  • அதே சமயம் இந்தியா- குவைத் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதைப் பெற்ற அமெரிக்க அதிபர்களான பில் கிளின்டன் மற்றும் ஜார்ஜ் புஷ், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உலகத் தலைவர்களும் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
உள்நாட்டில் மிக நவீனமாக தயாரிக்கப்பட்ட நீல்கிரி, சூரத் போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு
  • கடற்படை பயன்பாட்டுக்காக பி17ஏ கிளாஸ் மற்றும் பி15பி கிளாஸ் கப்பல்கள் தயாரிக்க மும்பையில் உள்ள மசகான் டாக்ஸ் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
  • இந்த இரு கப்பல்களின் வடிவமைப்பை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவு உருவாக்கி கொடுத்தது. அதன்படி போர்க்கப்பல் மேற்பார்வை குழு கண்காணிப்பில், உலகத்தரத்துக்கு இணயைாக இந்த 2 போர்க்கப்பல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
  • நீல்கிரி கப்பல் கடலில் எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் எதிரிநாட்டு ரேடார்களில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், இதில் நவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள், ஏவுகணைகள், விமானங்கள் நெருங்கினால் இதில் உள்ள சென்சார் கருவிகள் உடனடியாக கண்டுபிடித்து எச்சரிக்கை விடுக்கும். 
  • அவற்றை தாக்குதவதற்கு தேவையான அனைத்து ஆயுதங்களும் இந்த கப்பலில் உள்ளன. இந்த போர்க்கப்பலுக்கு உதவியாக எந்த துணை போர்க்கப்பல்களும் செல்லத் தேவையில்லை. எங்கும் தனியாக செல்லும் முன்னணி கப்பலாக இது கடற்படையில் இருக்கும்.
  • சூரத் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் மற்றும் பராக்-8 ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஏவமுடியும். மேலும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் ஆயுதங்களும், சென்சார்கள் இதில் உள்ளன. 
  • கப்பலின் அடிப் பகுதியில் சோனார் ஹம்சா என்ஜி, டார்பிடோ ஏவுகணைகளை ஏவும் ட்யூப் லாஞ்சர், ஏஎஸ்டபிள்யூ ராக்கெட் லாஞ்சர் ஆகியைவை இந்த கப்பலில் உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel