Type Here to Get Search Results !

12th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


12th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
  • கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கோயில் நுழைவுப் போராட்டம் நினைவாக,1994-ல் தந்தை பெரியாருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. அந்த நினைவிடத்தை புனரமைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
  • இதனை தொடர்ந்து வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவகத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். இதில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர்களுக்கான மாடம், சிறுவர் பூங்கா போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
  • 1994-ல் திறக்கப்பட்ட இந்த நினைவகம், தற்போது ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியைத் துவங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கேரளா சென்றார். 
  • இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து வைத்தார். 
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு - நீலநிற கண்ணாடி மணி, சுடுமண் பதக்கம் கண்டெடுப்பு
  • விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 
  • இதுவரை தங்க நாணயம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2850-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் மூன்றாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
  • இந்நிலையில் புதன்கிழமை தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் நீல நிற கண்ணாடி மணி, சுடுமண்ணால் ஆன பதக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
2024-25-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் அந்நிய நேரடி முதலீடு
  • ஏப்ரல் 2000 முதல் மொத்த அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) 1 டிரில்லியன் டாலரை எட்டியதன் மூலம் இந்தியா தனது பொருளாதார பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 
  • நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், அந்நிய நேரடி முதலீடு சுமார் 26% அதிகரித்து 42.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 
  • கணிசமான கடன் அல்லாத நிதி ஆதாரங்களை வழங்குவதன் மூலமும், தொழில்நுட்ப பரிமாற்றங்களை ஊக்குவிப்பதன் மூலமும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் இந்தியாவின் வளர்ச்சியில் அந்நிய நேரடி முதலீடு மாற்றத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. 
  • "இந்தியாவில் தயாரியுங்கள்", தாராளமயமாக்கப்பட்ட துறைசார் கொள்கைகள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்ற முன்முயற்சிகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளன, 
  • அதே நேரத்தில் போட்டி தொழிலாளர் செலவுகள் மற்றும் உத்திசார்ந்த ஊக்கத்தொகைகள் பன்னாட்டு நிறுவனங்களை தொடர்ந்து ஈர்க்கின்றன.
  • கடந்த பத்தாண்டில் (ஏப்ரல் 2014 முதல் செப்டம்பர் 2024 வரை), மொத்த அந்நிய நேரடி முதலீடு 709.84 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த 24 ஆண்டுகளில் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 68.69% ஆகும். 
  • இந்த வலுவான முதலீடுகளின் வருகை, உலகப் பொருளாதார நிலையை வடிவமைப்பதில் இந்தியாவின் முக்கிய பங்கை சுட்டிக் காட்டுகிறது.
  • உலக போட்டிக் குறியீடு 2024-ல் இந்தியாவின் தரவரிசை 2021-ல் 43 வது இடத்தில் இருந்து மூன்று இடங்கள் முன்னேறி 40 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கூடுதலாக, முதல் 50 நாடுகளில் 48 வது மிகவும் புதுமையான நாடாக இந்தியா பெயரிடப்பட்டது. 
  • உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு 2023-ல் 132 பொருளாதாரங்களில் 40 வது இடத்தைப் பிடித்தது. இது 2015-ல் அதன் 81 வது இடத்திலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
2024 அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு வளர்ச்சி
  • 2024 அக்டோபர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்திக்கான வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதமாகும். இந்த விகிதம் செப்டம்பர் மாதத்தில் 3.1 சதவீதமாக இருந்தது.
  • சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 0.9 சதவீதம், 4.1 சதவீதம் மற்றும் 2.0 சதவீதமாகும்.
  • தொழில்துறையின் உற்பத்திக் குறித்த விரைவான மதிப்பீடுகள் 2023 அக்டோபர் மாதத்தில் 144.9 ஆக இருந்த நிலையில், 2024 அக்டோபரில் இந்த மதிப்பீடுகள் 149.9 ஆக உள்ளது.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் டி. குகேஷ்
  • சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. 14 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 13 சுற்றுகளில் குகேஷ் - டிங் லிரென் ஆகியோர் 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
  • இதனால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 14வது சுற்று இன்று (டிச. 12) தொடங்கியது. இந்தச் சுற்றும் சமநிலையில் முடியும் என்ற நிலையிலேயே இருவரின் ஆட்டமும் நீடித்துவந்தது.
  • எனினும் போட்டி முடிவதற்கு சிறிதுநேரத்திற்கு முன்பு 55வது நகர்த்தலில் லிரென் செய்த சிறிய தவறு, குகேஷுக்கு சாதகமாக அமைந்தது.
  • இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட குகேஷ் 58வது நகர்த்தலில் ஆட்டத்தை முடித்து ஒரு புள்ளியைப் பெற்றார். குகேஷ் 7.5, டிங் லிரென் 6.5 என்ற புள்ளிப் பட்டியலின்படி உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை குகேஷ் வென்றார்.
  • இதன்மூலம், விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்ற இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.
  • மேலும், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ரஷிய வீரர் கேரி காஸ்பரோவ், இதுவரை அந்தப் பெருமை பெற்றிருந்தார். இவர் 22 வயதில் சாம்பியனானார். ஆனால், குகேஷ் இந்த சாதனையை 18 வயதில் முறியடித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel