Type Here to Get Search Results !

6th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

 

6th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஆருயிர் - அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

  • இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் அனைவருக்கும் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டத்தின் கீழ் அனைவருக்கும் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி தரப்பட உள்ளது. 
  • ஆருயிர் - அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • தலைமைச் செயலகத்தில் பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து பணிக்கு தேர்வான 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காளை உருவ பொம்மை கண்டெடுப்பு
  • விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகள் நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் 3ம் கட்ட அகழாய்வு பணி கடந்த 18-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. 
  • முன்னதாக கண்ணாடி மணிகள், கல்மணிகள் மற்றும் பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி, கிபி 16ம் நூற்றாண்டு நாயக்கர் கால செப்பு காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.
  • இந்நிலையில் இன்று (ஜூலை 6) உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட காளை உருவ பொம்மை, சுடுமண் காதணி, அலங்கரிக்கப்பட்ட சுடுமண் மணி ஆகிய தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஈரான் அதிபர் தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி
  • ஈரான் நாட்டின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், இதையடுத்து அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
  • இந்தத் தேர்தலில் மொத்தம் 3 கோடி பேர், அதாவது வாக்களிக்க தகுதியானவர்களில் 49.8% பேர் வாக்களித்துள்ளனர். அதில் மசூத் பெசெஷ்கியனுக்கு ஆதரவாக 1.6 கோடி பேர் வாக்களித்துள்ளனர். 
  • அதேநேரம் சயீத் ஜலிலிக்கு ஆதரவாக 1.3 கோடி பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதையடுத்து அங்கு நடந்த அதிபர் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அதில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றுள்ளார்.
உணவு ஆணையத்தின் 44-வது கூட்டம்
  • பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில், மொத்த சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு தொடர்பான ஊட்டச்சத்து தகவல்களை பெரிய எழுத்துக்களில் காட்சிப்படுத்தும் திட்டத்திற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ - FSSAI) ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஊட்டச்சத்து தகவல் தொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள்-2020-ல் திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கும் இந்த முடிவு உணவு ஆணையத்தின் 44-வது கூட்டத்தில் எடுக்கப்பட்டது. 
  • இக்கூட்டம் எஃப்எஸ்எஸ்ஏஐ தலைவர் திரு அபூர்வா சந்திரா தலைமையில் நடைபெற்றது. நுகர்வோர் தாங்கள் உட்கொள்ளும் உணவின் ஊட்டச்சத்து மதிப்பை நன்கு புரிந்துகொள்வதற்கும் அதற்கேற்ப முடிவுகளை எடுப்பதற்கும் அதிகாரம் அளிப்பதை இந்த திருத்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த திருத்தத்திற்கான வரைவு அறிவிக்கை இப்போது பொது களத்தில் வைக்கப்படும். அதன் மீது ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் வரவேற்கப்படும்.
  • ஆரோக்கியமான தேர்வுகளை மேற்கொள்ள நுகர்வோருக்கு அதிகாரம் அளிப்பதுடன், தொற்றா நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும், பொது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் இந்த திருத்தம் பங்களிக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel