Type Here to Get Search Results !

7th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


7th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

காங்கிரஸின் 100-வது எம்.பி
  • காங்கிரஸ்காரரான விஷால் படேலுக்கு கூட்டணி பேச்சுவார்த்தையால் சங்லி தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனை வேட்பாளர் அதே தொகுதியில் கூட்டணி சார்பில் போட்டியிட்டார்.
  • விஷால் பாட்டில் கட்சியின் முடிவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  • அவரது பெயரை பரிந்துரைத்த காங்கிரஸ் எம்எல்ஏ விஷ்வஜீத் கடம், விஷாலின் ஆதரவில் காங்கிரஸின் பலம் மக்களவையில் 100 ஆக உயருமென தெரிவித்துள்ளார்.
  • விஷால் பாட்டில் மற்றும் எம்எல்ஏ விஷ்வஜீத் கடம் வியாழக்கிழமை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்தித்தனர். கார்கேவிடம் தனது ஆதரவு கடிதத்தை அளித்தார் பாட்டில்.
  • முன்னாள் முதல்வர் வசந்த்தாதா பாட்டிலின் பேரனான விஷால் பாட்டில். தனித்து நின்று பாஜகவின் இரண்டு முறை எம்பி சஞ்சய்காகா பாட்டிலை தோற்கடித்துள்ளார்.
8வது முறையாக ஐநா சபையில் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக பாகிஸ்தான் தேர்வு
  • ஐநா சபையில் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக நாடுகளை தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அந்த வாக்கெடுப்பில் மொத்தம் ஐந்து நாடுகள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு கவுன்சில் நாடுகளின் உறுப்பினர் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
  • பாகிஸ்தான், சோமாலியா, டென்மார்க், கிரீஸ், பனாமா ஆகிய ஐந்து நாடுகள் ஐ. நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 
  • இந்த நாடுகளின் பதவிக் காலம் 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொடங்கி 2026ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முடிவடைகிறது. முன்னதாக பொறுப்பில் இருந்த ஈக்குவடார், ஜப்பான், மால்டா, மொசாம்பி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளை பதிலீடு செய்யவுள்ளன.
  • இந்நிலையில் பாகிஸ்தான் ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரானது பெருமைக்குரிய நிகழ்வு என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் கூறியுள்ளார். 
  • பாகிஸ்தான் 8வது முறையாக ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • மேலும் ஐநாவின் புதிய தலைவராக கேமரூன் நாட்டின் முன்னாள் பிரதம அமைச்சர் பிலிமோன் யாங் பொது அவையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel