Type Here to Get Search Results !

13th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


13th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ருச்சி ப்ரீதம் எழுதிய "Ancient Jain Legacy of Tamil Nadu" என்ற புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், அவர்களின் மனைவி ருச்சி ப்ரீதம் எழுதிய “Ancient Jain Legacy of Tamil Nadu" (தமிழ்நாட்டின் பண்டைய சமண மரபு) என்ற புத்தகத்தை வெளியிட்டார். 
  • எழுத்தாளர் ருச்சி ப்ரீதம் அவர்கள் எழுதிய “தமிழ்நாட்டின் பண்டைய சமண மரபு” என்ற புத்தகத்தில், மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் கலையில் சமண மதத்தின் தாக்கத்தையும், தமிழ்நாட்டின் அடையாளத்தில் சமண மதத்தின் ஒருங்கிணைந்த பங்கினையும் எடுத்துக்காட்டுகிறது.
  • தமிழ்நாட்டின் கலை, கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரத்தில் சமண மதத்தின் தாக்கம் குறித்த நுணுக்கமான விவரங்களுடன், மதத்திற்கு அப்பாற்பட்ட சமண மதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. 
  • மேலும், இப்புத்தகம் சமண மதத்திற்கும் தமிழ்நாட்டின் வளமான பாரம்பரியத்திற்கும் இடையிலான ஆழமான தொடர்புகளை ஆராய்வதுடன், சமண மதத்தின் நீடித்த செல்வாக்கிற்கு சான்றாக விளங்குகிறது.
3வது முறையாக அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் பெமா காண்டு
  • மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதி வெளியானது. 
  • இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 60 பேரவைத் தொகுதிகளில், பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகினா். மீதமுள்ள 50 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்டது.
  • பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் கூட காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி (என்பிபி) உள்ளிட்ட பிற கட்சிகள் களமிறங்கவில்லை. போட்டியிட்ட 50 தொகுதிகளில் பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்றது. 
  • ஏற்கெனவே போட்டியின்றி தோ்வான 10 இடங்களையும் சோ்த்து, பாஜகவின் பலம் 46 இடங்களை கைப்பற்றியது.
  • தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 5 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும், அருணாசல் மக்கள் கட்சி 2 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸுக்கு ஓரிடம் மட்டுமே கிடைத்தது. இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பெமா காண்டு இன்று பதவியேற்றார்.
  • அவர் தொடர்ந்து 3வது முறையாக முதலமைச்சராகி உள்ளார். அவருக்கு ஆளுநர் கே.டி.பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா மற்றும் பாஜக கட்சியினர் பங்கேற்றனர்.
2024 மே மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்கம் 4.75 சதவீதமாக குறைவு
  • 2024 மே மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்கம் ஏப்ரல் 2024ல் 4.83 சதவிகிதமாக ஆக இருந்த நிலையில் அது 4.75 சதவிகிதமாக குறைந்துள்ளது.
  • அதுவே கிராமப்புற மற்றும் நகர்ப்புற பணவீக்க விகிதம் முறையே 5.28% மற்றும் 4.15% ஆக உள்ளது. நுகர்வோர் உணவு விலை பணவீக்கமானது 2024 ஏப்ரலில் 8.70 சதவிகிதமாக இருந்த நிலையில் அது 8.69 சதவிகிதமாக குறைந்துள்ளது.
  • குறிப்பிடத்தக்க வகையில், மே 2024க்கான பொது நுகர்வோர் அடிப்படையிலான அகில இந்திய பணவீக்கம், மே 2023க்குப் பிறகு மிகக் குறைவாக உள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இது செப்டம்பர் 2023 முதல் 6 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
  • முந்தைய மாதமான ஏப்ரல் 2024 உடன் ஒப்பிடுகையில் 'ஸ்பைசஸ்' ஆண்டாண்டு பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க சரிவை கண்டுள்ளது. கூடுதலாக ஆடை, காலணி, வீட்டுவசதி போன்றவற்றுக்கான பணவீக்க விகிதங்களும் கடந்த மாதத்திலிருந்து குறைந்துள்ளன.
  • நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி குறியீடு 5 சதவிகிதமாக வளர்ந்துள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 2023 ஏப்ரலில் பதிவு செய்யப்பட்ட 4.6 சதவிகித வளர்ச்சி விகிதத்திலிருந்து சிறிதளவு அதிகமாகும். 
  • அதே வேளையில், சுரங்கத் துறை ஏப்ரல் 2023 உடன் ஒப்பிடும்போது ஏப்ரல் 2024ல் 6.7 சதவிகித வளர்ச்சியை வெளிப்படுத்தியது. மறுபுறம் உற்பத்தித் துறை இதே காலகட்டத்தில் 3.9 சதவிகித மிதமான வளர்ச்சி விகிதத்தை கொண்டிருந்தது. 
  • கடைசியாக மின்சாரத் துறை முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் 2024ல் 10.2 சதவிகித வளர்ச்சி விகிதத்தைக் எட்டியுள்ளது.
இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமனம்
  • நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக தற்போது ஜெனரல் மனோஜ் பாண்டே இருக்கிறார். 2022 ஏப்ரல் மாதம் முதல் மனோஜ் பாண்டே ராணுவ தளபதியாக பொறுப்பு வகித்து வருகிறார். 
  • இவரது பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், ராணுவத்திற்கு விரைவில் புதிய தளபதி அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியானது. இருப்பினும், மக்களவைத் தேர்தல் காரணமாக அறிவிப்பு வராமல் இருந்தது.
  • இந்நிலையில், நாட்டின் அடுத்த ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் 30 ஆம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் திவேதி ராணுவ தலைமை தளபதி பொறுப்பை ஏற்கவுள்ளார்.
  • இப்போது ராணுவத் துணை தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் திவேதி, நாட்டின் 30வது இராணுவ தலைமை தளபதியாகப் பொறுப்பேற்க இருக்கிறார். இவர் காலாட்படை டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட பல பொறுப்புகளையும் கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel