Type Here to Get Search Results !

10th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


10th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்ற மோடியின் முதல் கையெழுத்து
  • நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்திருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வாகியிருக்கும் மோடி நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பலன் பெறும் திட்டங்களுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதியை விடுவிப்பதற்கான கோப்பில்தான் பிரதமர் இன்று முதல் கையெழுத்திட்டுள்ளார்.
  • தில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்ட பிரதமர் மோடி, பிரதமரின் விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 17வது தவணையை விடுவிப்பதற்கான ஆவணத்தில் மோடி கையெழுத்திட்டிருக்கிறார்.
3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி - அமைச்சரவையில் ஒப்புதல்
  • நாட்டின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்ற பிறகு, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
  • கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்துக்கு கூடுதல் நிதி அளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று (ஜூன் 10) ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டணி கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
  • கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு கட்ட நிதி அளித்து உதவும் வகையில் கடந்த 2015 - 16 முதல், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • கடந்த 10 ஆண்டுகளில் தகுதி வாய்ந்த மக்களுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், இதுவரை 4.21 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 
  • வீடுகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பறை, எரிவாயு (எல்பிஜி) இணைப்பு, மின்சார இணைப்பு, குடிநீர் வசதி உள்ளிட்டவைகளுடன் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.
  • தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால், இத்திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்டப்படவுள்ளன.
சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் பதவியேற்பு
  • முதல்வா் தமங் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெறும் புதிய அமைச்சா்களின் பதவியேற்பு விழா பால்ஜோா் மைதானத்தில் நடைபெற்றது. 56 வயதாகும் தமங், சிக்கிம் மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
  • சிக்கிமில் மக்களவைத் தோ்தலுடன் பேரவைத் தோ்தலும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 32 பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் 2-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 31 இடங்களைக் கைப்பற்றி, ஆளும் எஸ்கேஎம் கட்சி அமோக வெற்றி பெற்றது.
பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் தொடர் -  ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கார்லோஸ் ஆல்கரஸ் சாம்பியன் 
  • ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்ஸ் ஸ்வெரவை வீழ்த்தி தன் மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார் அவர். 
  • அந்த இறுதிப் போட்டியின் மூன்று சுற்றுகள் முடிவில் 6-3, 2-6, 5-7 என பின்தங்கியிருந்த நிலையில், கடைசி 2 செட்களையும் 6-1, 6-2 என எளிதாக வென்று அசத்தினார் அவர்.
  • இது கார்லோஸ் ஆல்கரஸின் மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாக அமைந்தது. 2022ல் முதல் முறையாக அமெரிக்க ஓப்பனை வென்றிருந்த அவர், கடந்த ஆண்டு விம்பிள்டன் ஃபைனலில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் ஆகியிருந்தார். 
  • இதன்மூலம் மிக இளம் வயதில் மூன்று வகையிலான தரைகளிலும் (ஹார்ட் கோட், புல்தரை, களிமண் தரை) சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனை படைத்திருக்கிறார் ஆல்கரஸ். 
  • மேலும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ரேங்கிங்கில் அவர் இப்போது இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். இத்தாலியின் யானிக் சின்னர் முதலிடத்தில் இருக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel