Type Here to Get Search Results !

4th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


4th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஆதித்த கரிகால சோழனின் கல்வெட்டு கண்டுபிடிப்பு
  • அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், பட்ட ஆய்வாளர் இமான் உள்ளிட்ட குழுவினர் விழுப்புரம் அருகே உள்ள ஏமப்பூர் கிராமத்தில் வேதபுரீஸ்வரர் கோயிலில் திருப்பணியின்போது ஆதித்த கரிகால சோழனின் கல்வெட்டை கண்டறிந்தனர்.
  • ஏற்கெனவே பேரங்கியூர், திருமுண்டீஸ்வரம் போன்ற இடங்களில் கிடைத்திருக்கிறது. தற்போது மேலும் ஒரு கல்வெட்டு கிடைத்திருக்கிறது.
  • "இக்கல்வெட்டு 'ஸ்வஸ்தி ஸ்ரீ வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி' என்று தொடங்குகிறது. இவனது நான்காவது ஆட்சி ஆண்டான பொது ஆண்டு 960 பொறிக்கப்பட்ட கல்வெட்டு திரு முனைப்பாடி நாட்டில் ஏமப்பேரூர் நாட்டு ஏமப்பேரூர் என்று இவ்வூரை அழைக்கிறது. இது ஒரு நாட்டின் தலைமையிடமாக விளங்கி இருக்கிறது.
  • "ஏமப்பேரூர் என்பதே தற்போது ஏமப்பூர் என்று மருவி அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வூர் திருவாலந்துறை ஆழ்வாருக்கு இவ்வூர் மன்றாடி நிகரிலி மூர்த்தி சூரியன் சந்திரர் உள்ளவரை ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காக 96 ஆடுகளை இக்கோயிலை நிர்வகித்த பன் மாகேஸ்வரர் வசம் ஒப்படைத்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவற்றில் இருந்து ஆதித்த கரிகாலன் இப்பகுதியை ஆட்சி புரிந்ததையும் அறிய முடிகிறது.
முதலாவது அடுத்த தலைமுறை ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கட்டும் பணி கோவா கப்பல் கட்டும் தளத்தில் மே 3 அன்று தொடங்கியது
  • முதலாவது அடுத்த தலைமுறை ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கட்டும் பணி நேற்று மே 3 அன்று கோவாவில் உள்ள கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தில் (ஜிஎஸ்எல்) நடைபெற்றது.
  • ஜிஎஸ்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு பி கே உபாத்யாய் மற்றும் இந்திய கடற்படை மற்றும் ஜிஎஸ்எல் ஆகியவற்றின் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கையகப்படுத்தல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் பி சிவகுமார் இந்த விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
  • உள்நாட்டிலேயே 11 அடுத்த தலைமுறை ரோந்துக் கப்பல்களை (என்ஜிஓபிவி) வடிவமைத்து நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தங்கள் கோவாவைச் சேர்ந்த கோவா ஷிப்யார்ட் லிமிடெட் மற்றும் கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) இடையே 2023 மார்ச் 30 அன்று ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டன.
  • கடற்கொள்ளை தடுப்பு, கடலோரப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு மற்றும் கடலோர சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள இந்த ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் பயன்படுத்தப்படும். 
  • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தேசத்தின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களைப் பாதுகாக்க இந்தியக் கடற்படை தனது போர்த் திறனை பராமரிக்க இந்தக் கப்பல்களுக்கு உதவும். 
  • இது உள்நாட்டு கப்பல் கட்டுவதற்கான இந்தியக் கடற்படையின் முயற்சியில் தற்சார்பு இந்தியா' மற்றும் 'மேக் இன் இந்தியா' ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel