Type Here to Get Search Results !

31st MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


31st MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

2024 ஏப்ரல் நிலவரப்படி மத்திய அரசின் வருவாய் ரூ.2,13,334 கோடி
  • 2024 ஏப்ரல் நிலவரப்படி மத்திய அரசின் வருவாய் ரூ.2,13,334 கோடியாக இருந்தது. இதில் ரூ1,84,998 கோடி வரி வருவாயாகும். ரூ.27,295 கோடி வரியல்லாத வருவாயாகவும் ரூ.1,041 கோடி கடன் அல்லாத மூலதன வருவாயாகவும் இருந்தது.
  • வருவாயிலிருந்து மாநில அரசுகளுக்கு பகிரப்படும் வகையில், ரூ.69,875 கோடி வழங்கப்பட்டது. இது முந்தைய ஆண்டைவிட ரூ.10,735 கோடி அதிகமாகும்.
  • மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.4,23,470 கோடியாக இருந்தது. இதில் ரூ.3,24,235 கோடி வருவாய் கணக்கிலும் ரூ.99,235 கோடி மூலதனக் கணக்கிலும் அடங்கும். 
  • மொத்த வருவாய் செலவினத்தில் ரூ.1,28,263 கோடி வட்டிக்காக செலுத்தப்பட்டத் தொகையாகும்.  ரூ.19,407 கோடி மானியங்களாக வழங்கப்பட்டது.
முப்பரிமாண பிரின்டிங் முறையில் உருவாக்கப்பட்ட என்ஜின் சோதனை வெற்றி
  • சென்னை ஐஐடியுடன் இணைந்து ஏராளமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், அக்னிகுல் காஸ்மோஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் தனியார் பயன்பாட்டுக்கு தேவைப்படும் சிறிய ரக ராக்கெட்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 
  • அதன்படி, அதிகபட்சம் 300கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவும் திறன் கொண்ட 'அக்னிபான்' என்ற சிறிய ரக ராக்கெட்டை உருவாக்கியது. முப்பரிமாண (3-டி) பிரின்டிங் முறையில் இதன் செமி-கிரையோஜெனிக் இன்ஜின் வடிவமைக்கப்பட்டது.
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானிகள் 45 பேரின் வழிகாட்டுதலில் 200 பொறியாளர்கள் கொண்ட குழுவினர் ராக்கெட் வடிவமைப்பில் ஈடுபட்டனர். சென்னை ஐஐடியில் உள்ள தேசிய எரிபொருள் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையமும் அவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவியது.
  • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ளஅக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏவுதளத்தில் அந்த ராக்கெட்டை சோதித்து பார்க்க கடந்த மார்ச் 22, ஏப்ரல் 6, 7, மே 28 என 4 முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தொழில்நுட்ப பிரச்சினையால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
  • இந்நிலையில், 5-வது முறையாக நேற்று காலை 7.15 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
46-வது அண்டார்டிகா ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம்
  • கேரளாவின் கொச்சியில் 2024, மே 20 முதல் மே 30 வரை 46-வது அண்டார்டிகா ஒப்பந்த ஆலோசனை மற்றும் 26-வது அண்டார்டிகா சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான குழுக் கூட்டத்தை இந்தியா வெற்றிகரமாக நிறைவுசெய்தது.
  • மைத்ரி-2 என்ற பெயரில் அண்டார்டிகா ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் இந்தியாவின் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
  • இந்நிலையில், 46-வது அண்டார்டிகா ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம், 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளுடன் நடைபெற்றது. 
  • இது அமைதி, அறிவியல் ஒத்துழைப்பு, மனிதகுலத்தின் நலனுக்காக அண்டார்டிகாவைப் பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுடன் நடைபெற்றது. இந்த மாநாட்டை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு மற்றும் மூத்த அதிகாரிகள் தொடங்கிவைத்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel