Type Here to Get Search Results !

14th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


14th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு 2024
  • தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7,534 பள்ளிகளை சேர்ந்த 3,89,736 மாணவர்கள், 4,30,471 மாணவிகள் என மொத்தம் 8, 20, 207 மாணவர்கள் எழுதினர். இதுதவிர, 5,000 தனித்தேர்வர்களும், 187 சிறை கைதிகளும் பிளஸ்-1 தேர்வை எழுதினார்கள்.
  • இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் - 1 தேர்வு முடிவுகள் இன்று மணிக்கு வெளியானது. மொத்தம் 91.17% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தாண்டு மாணவர்களை விட மாணவிகள் 7.43% சதவிகிதம் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். 
  • இதில் 96.02% பேர் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதலிடமும், 95.56% பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2வது இடமும், 95.23% பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் 3வது இடமும் பெற்றுள்ளன.
தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பு நாணயங்கள் கண்டெடுப்பு
  • பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு மற்றும் தளவானூர் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் ரமேஷ் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர்.
  • அப்போது பழங்காலச் செப்பு நாணயங்கள் இரண்டை அவர்கள் கண்டெடுத்தனர்.
  • அவற்றை ஆய்வுசெய்ததில் அவை 15ஆம் நூற்றாண்டு விஜயநகரக் காலத்தைச் சேர்ந்தவை எனத் தெரியவந்தது. நாணயத்தின் முன்பக்கத்தில் காளையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது; பின்பக்கத்தில் 'தேவராயர்' என்று தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது.
  • இதற்கு முன்னரும் தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் செப்பு நாணயங்களும் தொல்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த ஆற்றங்கரைப் பகுதிகளில் சங்க காலம் முதல் விஜயநகர காலம் வரை பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
  • இதனால், தென்பெண்ணை ஆற்றுப் பகுதிகள் பழங்கால மக்களின் வாழ்விடமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களாகவும் இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
2024 ஏப்ரல் மாதத்திற்கான இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண்கள்
  • அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் 2024 ஏப்ரல் மாதத்தின் (ஏப்ரல், 2023-ஐ விட) வருடாந்தர பணவீக்க விகிதம் 1.26% ஆக உள்ளது (தற்காலிகமானது). 
  • 2024 ஏப்ரல் மாதத்தில் முதன்மையான உணவுப் பொருட்கள், மின்சாரம், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் பிற உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு,  பணவீக்கத்தின் நேர்மறையான விகிதத்திற்குக் காரணமாகும்.
  • மாத அடிப்படையிலான மாற்றத்தைப் பொருத்தவரை 2024 மார்ச்சுடன்  ஒப்பிடும்போது 2024 ஏப்ரல் மாதத்திற்கான வருடாந்தர பணவீக்க விகிதம் 0.79% ஆக இருந்தது.
  • 2024 பிப்ரவரி மாதத்திற்கான இறுதிக் குறியீடு (அடிப்படை ஆண்டு: 2011-12=100): 2024 பிப்ரவரி மாதத்திற்கான இறுதி மொத்த விலைக் குறியீடு மற்றும் 'அனைத்துப் பொருட்களின்' பணவீக்க விகிதம் (அடிப்படை: 2011-12=100) முறையே 151.2% மற்றும் 0.20% ஆக இருந்தது.
  • 2024 பிப்ரவரி இறுதி எண்ணிக்கை 95.5 சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டது. மொத்த விலைக் குறியீட்டெண் குறித்த தற்காலிக புள்ளி விவரங்கள், இறுதி திருத்தக் கொள்கையின்படி திருத்தியமைக்கப்படும். 
உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024
  • 2024 மே 13 முதல் 15 வரை நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் நடைபெறும் உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024 -ல் முதல் முறையாக இந்தியா தனது சொந்த அரங்கத்தை அமைத்துள்ளது. 
  • இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட இந்தியாவின் அரங்கு, உச்சிமாநாட்டின் மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றாகும். 
  • இது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு பூபிந்தர் எஸ் பல்லா-வால் மே 12 அன்று திறந்து வைக்கப்பட்டது.
  • உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு மதிப்புமிக்க நிகழ்வாகும். இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 15,000 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  • பசுமை ஹைட்ரஜன் துறையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை உலகிற்கு எடுத்துக்காட்ட இந்த மாநாட்டின் இந்திய அரங்கம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது
  • இந்தியக் குழுவில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ரயில்வே அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். 
  • பல்வேறு ஜி2ஜி கலந்துரையாடல்களுக்கு மேலதிகமாக, உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுடன் இந்திய தொழில்துறை ஈடுபடுவதற்கான ஒரு தளத்தை இந்த உச்சிமாநாடு வழங்குகிறது.
இந்தியா ஈரான் இடையே சபஹர் துறைமுக ஒப்பந்தம் கையெழுத்தானது
  • ஈரானில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சபஹர் துறைமுக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவும், ஈரானும் நீண்டகாலமாக முயற்சித்து வந்தன.
  • இந்நிலையில் சபஹர் துறைமுகத்தின் ஒரு முனையத்தை 10 ஆண்டுகள் இந்தியா இயக்குவதற்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது. 
  • துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் முன்னிலையில் இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் மற்றும் ஈரானின் துறைமுகம் மற்றும் கடல்சார் அமைப்பு ஆகியவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 
  • இதன்படி சபஹர் துறைமுக மேம்பாட்டு திட்டத்தில் ஷாஹித்-பெஹெஷ்டி முனையத்தை 10 ஆண்டுகள் இந்தியா நிர்வகிக்கும். வெளிநாட்டு துறைமுக நிர்வாகத்தை இந்தியா கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel