Type Here to Get Search Results !

6th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


6th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தொடர்ந்து 7வது முறையாக குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  • ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கை மறு சீராய்வு அறிக்கையை வெளியிடுகிறது. இதன்படி நடப்பு மாதத்துக்கான கூட்டம் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 
  • ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனவே ரெப்போ விகிதம் 6.5% ஆகவே தொடரும். தொடர்ந்து 7வது முறையாக இது மாற்றம் செய்யப்படவில்லை.
  • பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீவிர கவனம் செலுத்தி வருவதால், ரெப்போ விகிதத்தை மாற்றவில்லை. முக்கிய கடன் விகிதங்களிலும் மாற்றமில்லை. 
  • பண வீக்கத்தை 4 சதவீதம் என்ற இலக்கிற்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருப்பினும் நடப்பு நிதியாண்டுக்கான பண வீக்கம் 4.5 சதவீதமாக இருக்கும். நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என தெரிவித்துள்ளது. 
  • ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யாததால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும். மக்களவைத் தேர்தல் காரணமாக ரெப்போ விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
காஸாவில் போர் நிறுத்தத்துக்காக ஐநாவில் தீர்மானம்
  • கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி இஸ்ரேல் மீது சுமார் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். 
  • அத்துடன், 200-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினர் காஸாவுக்குள் கடத்திச் சென்றனர். 
  • இதனைத் தொடர்ந்து, 6 மாத காலமாக இஸ்ரேல் - காஸா இடையே போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 33 ஆயிரத்தும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக நேற்று (ஏப். 5) 4 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. அதில் 3 தீர்மானங்களை ஆதரித்து இந்தியா வாக்களித்தது. 
  • காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படுவதை உறுதிசெய்ய வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது.
  • இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற ராணுவ உபகரணங்கள் வழங்குதல் ஆகியவற்றை நிறுத்தக் கோரியும், போர்க்குற்றங்களுக்கு நீதி கோரியும் வலியுறுத்தப்பட்டது. 
  • பாலஸ்தீன மக்களுக்கு அடிப்படைத் தேவைகளையும், அவசர உதவிகளை வழங்குதல் உள்ளிட்டவைகள் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
  • கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கும் இத்தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஹமாஸ் அமைப்பினர் சிறைப்பிடித்துள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கும் இத்தீர்மானம் கோரியுள்ளது. இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா, ஜப்பான், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ருமேனியா உள்ளிட்ட 13 நாடுகள் பங்கேற்கவில்லை.
  • சீனா, பிரேசில், இந்தோனேசியா, வங்கதேசம், மாலத்தீவுகள், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 28 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, அர்ஜென்டினா, பல்கேரியா, ஜெர்மனி, மலாவி மற்றும் பராகுவே ஆகிய 6 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
  • பாலஸ்தீன மக்களின் உரிமையை உறுதிப்படுத்தும் தீர்மானத்திற்கு இந்தியா உள்பட 42 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. சிரியன் கோலன் பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை விடுவிக்கக் கோரிய தீர்மானத்திற்கும் இந்தியா உள்பட 42 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 
  • கிழக்கு ஜெருசலேம் உள்பட பாலஸ்தீனத்தில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை விடுவிக்கக் கோரிய தீர்மானத்திற்கும் இந்தியா ஆதரவாக வாக்களித்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel