Type Here to Get Search Results !

3rd MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


3rd MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் முதன்முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏஎஸ்டிடிஎஸ் இழுவைக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
  • மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால், 'ஓஷன் கிரேஸ்' என்று பெயரிடப்பட்ட இழுவைக் கப்பல் மற்றும் பாராதீப் துறைமுகத்தின் நடமாடும் மருத்துவ மையத்தை (MMU) காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 
  • கொச்சி கப்பல் கட்டும் தளம், முதன்முதலாக இந்தியாவிலேயே உருவாக்கிய ஏஎஸ்டிடிஎஸ் இழுவைக் கப்பல் ஓஷன் கிரேஸ் ஆகும். 
  • நடமாடும் மருத்துவ மையம் (MMU) என்பது பாராதீப் துறைமுகத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் சேவையாகும். 
  • இந்த இழுவைக் கப்பல் முன்முயற்சி பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது.
உள்நாட்டு பாதுகாப்பு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் டெஃப்கனெக்ட் 2024 ஐ தொடங்கி வைக்கிறார்
  • உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்புகளை அதிகரிப்பதற்கும், பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் இயங்கும் உயர் சிறப்பு பாதுகாப்பு கண்டுபிடிப்பு அமைப்பு (iDEX-DIO), புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் டெஃப்கனெக்ட் 2024 என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்.
  • டெஃப்கனெக்ட் 2024 (DefConnect 2024) ஆயுதப்படைகளின் பிரதிநிதிகள், பாதுகாப்புத் தொழில்துறை வல்லுநர்கள், புத்தொழில் நிறுவனத்தினர், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரிவினரை ஒருங்கிணைக்கிறது. இந்த நிகழ்வு ஒத்துழைப்பை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • பாதுகாப்புத் துறையில் புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவை வளர்ப்பதற்கான ஒரு தளமாக இது அமையும். பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் முன்னணி தொழில்களைச் சேர்ந்த ஏராளமான கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.
  • ஐடெக்ஸ் (iDEX) இதுவரை, 10 சுற்று டிஃபென்ஸ் இந்தியா ஸ்டார்ட்-அப் சேலஞ்ச் (டிஸ்க்) மற்றும் 11 சுற்று ஓபன் சேலஞ்ச் (ஓசி) ஆகியவற்றை நடத்தியுள்ளது. 
பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு
  • பாகிஸ்தானில் மொத்தம் உள்ள 336 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது.
  • இந்த நிலையில், பாகிஸ்தான் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ்சபை என அழைக்கப்படும் தேசிய சட்டமன்றம் கூடியது. 
  • அதில், பெரும்பான்மை வாக்குகளை பெற்று பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் (72) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • மொத்தம் 336 உறுப்பினர்கள் கொண்ட அவையில், பெரும்பான்மைக்கு 169 வாக்குகள் தேவைப்படும் நிலையில், 201 வாக்குகளை பெற்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) ஆகியவற்றின் ஒருமித்த வேட்பாளரான ஷெபாஸ் ஷெரீப் வெற்றி பெற்றுள்ளார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel