28th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
முக்கிய எட்டு தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு பிப்ரவரி 2024
- எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு பிப்ரவரி 2023 குறியீட்டுடன் ஒப்பிடும்போது பிப்ரவரி 2024-ல் 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
- நிலக்கரி, இயற்கை எரிவாயு, சிமெண்ட், எஃகு, கச்சா எண்ணெய், மின்சாரம் மற்றும் சுத்திகரிப்பு தயாரிப்புகளின் உற்பத்தி 2024 பிப்ரவரியில் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
- சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் எஃகு ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட செயல்திறனை ஐசிஐ அளவிடுகிறது.
- தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் ஐஐபி சேர்க்கப்பட்டுள்ள எட்டு முக்கிய தொழில்கள் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
- நவம்பர் 2023-க்கான எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின் இறுதி வளர்ச்சி விகிதம் 7.9 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளது. 2023-24 ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் ஐசிஐயின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 7.7 சதவீதம் ஆகும்.
- 2024 பிப்ரவரி மாதம் வரையிலான மத்திய அரசின் மாதாந்திர கணக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
- 2024 பிப்ரவரி வரை இந்திய அரசு ரூ.22,45,922 கோடி (மொத்த ரசீதுகளில் தொடர்புடைய ஆர்இ 2023-24-ல் 81.5%) பெற்றுள்ளது. இதில் ரூ.18,49,452 கோடி வரி வருவாய் (மத்திய அரசுக்கு நிகர), ரூ 3,60,330 கோடி வரி அல்லாத வருவாய் மற்றும் ரூ. 36,140 கோடி கடன் அல்லாத மூலதன ரசீதுகள் அடங்கும்.
- கடன் அல்லாத மூலதன ரசீதுகளில் ரூ. 23,480 கோடி கடன்கள் மீட்பு மற்றும் ரூ.12,660 கோடி இதர மூலதன ரசீதுகள் அடங்கும். இந்தக் காலகட்டம் வரை இந்திய அரசால் வரிகளின் பங்காக ரூ.10,33,433 கோடி மாநில அரசுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டை விட ரூ.2,25,345 கோடி அதிகமாகும்.
- இந்திய அரசின் மொத்த செலவினம் ரூ.37,47,287 கோடி (தொடர்புடைய ஆர்இ 2023-24 இல் 83.4%), இதில் ரூ.29,41,674 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.8,05,613 கோடி மூலதனக் கணக்கிலும் உள்ளது.
- மொத்த வருவாய் செலவினங்களில், ரூ.8,80,788 கோடி வட்டி செலுத்துதலுக்காகவும், ரூ.3,60,997 கோடி முக்கிய மானியங்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.
- சீரழிந்துள்ள தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தை மீட்பதற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக,பிரதமா் தினேஷ் குணவா்த்தன சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.
- தலைநகா் பெய்ஜிங்கில் அதிபா் ஷி ஜின்பிங்கைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இருதரப்பு நல்லுறவை மேம்படுத்தும் 9 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
- இலங்கைக்கு மிகப் பெரும்பான்மையாக கடன் அளித்துள்ள நாடு சீனா. கடந்த 2022-இல் இலங்கை திவால் நிலை அறிவித்தபோது அந்த நாட்டுக்கு சீனாவிடமிருந்து 4,000 கோடி டாலா் (சுமாா் ரூ.3.33 லட்சம் கோடி) கடன் இருந்தது.
- இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக 290 கோடி நிதியுதவி அளிப்பதற்கான 2-ஆவது சுற்று பகுப்பாய்வை சா்தேச நிதியம் (ஐஎம்எஃப்) அண்மையில் நிறைவு செய்தது.
- அப்போது, தங்களுக்கு கடன் அளித்தவா்கள், சா்வதேச கடன்பத்திரதாரா்கள், சைனா டெவலப்மென்ட் வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டால்தான் தங்களின் நிதியுதவி சாத்தியமாகும் என்று ஐஎம்எஃப் கூறியிருந்தது.
- இந்தச் சூழலில், சீனாவில் இலங்கை பிரதமா் தினேஷ் குணவா்த்தன சுற்றுப்பயணம் மேற்கொண்டு இது தொடா்பான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளாா்.