Type Here to Get Search Results !

11th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


11th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நியமனம்
  • தமிழ்நாடு மாநிலத் தோதல் ஆணையராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.பழனிகுமாா், 2021-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டாா். இரண்டு ஆண்டுகள் பணிக்காலத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு மே மாதம் மீண்டும் அதே பதவியில் ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டாா். 
  • அவரது, நீட்டிக்கப்பட்ட பணிக் காலம் வரும் சனிக்கிழமையுடன் (மாா்ச் 9) நிறைவடைகிறது. சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பணி நாளான வெள்ளிக்கிழமையுடன் பணி நிறைவு பெற்றார். 
  • இதையடுத்து, புதிய தோதல் ஆணையரை நியமிக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமணம் செய்யப்பட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானது
  • நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு இன்று (மார்ச் 11) அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது தொடர்பான அறிவிப்பை அரசிதழில் உள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 
  • கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர் 12-ல் ஒப்புதல் அளித்தார்.
  • இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது.
  • அதாவது ஹிந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகளுக்கு குடியுரிமை வழங்குகிறது.
பல்வேறு மாநிலங்களுக்கான ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்
  • நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை ஹரியானா மாநிலம் குருகிராமில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 
  • நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் தொழில்நுட்பம் மூலம் இந்த நிகழ்ச்சியுடன் இணைந்தனர்.
  • ஆந்திராவில் ரூ.14,000 கோடி மதிப்பிலான பெங்களூரு - கடப்பா - விஜயவாடா விரைவுச் சாலையின் 14 தொகுப்புகள்; கர்நாடகாவில் ரூ. 8,000 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை 748A இன் பெல்காம் – ஹங்குந்த் – ராய்ச்சூர் பிரிவின் ஆறு தொகுப்புகள்; ஹரியானாவில் ரூ .4,900 கோடி மதிப்புள்ள ஷாம்லி - அம்பாலா நெடுஞ்சாலையின் மூன்று தொகுப்புகள்; பஞ்சாபில் ரூ.3,800 கோடி மதிப்பில் அமிர்தசரஸ் - பதிண்டா வழித்தடத்தின் இரண்டு தொகுப்புகள்; மேலும், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ரூ.32,700 கோடி மதிப்பிலான 39 இதர திட்டங்களும் செயல்படுத்தப்படும்.
நேட்டோவில் இணைந்த ஸ்வீடன்
  • உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, அதுவரை அணிசேரா நிலையைக் கடைப்பிடித்து வந்த அண்டை நாடுகளான பின்லாந்தும், ஸ்வீடனும் தங்களது பாதுகாப்புக்காக நேட்டோவில் இணைய விண்ணப்பித்தன.
  • ஆனால், ஸ்வீடன் நேட்டோவில் இணைய மற்றொரு நேட்டோ உறுப்பினரான துருக்கி தடையாக இருந்து வந்தது.
  • இஸ்லாமிய மதத்துக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கவில்லை என்றும், பயங்கரவாத குா்து இனக் குழுக்களை ஆதரிப்பதாகவும் ஸ்வீடன் மீது குற்றஞ்சாட்டி வரும் துருக்கி, அந்நாட்டை நேட்டோவில் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து வந்தது.
  • இந்நிலையில், துருக்கியின் ஆட்சேபணை காரணமாக, ஸ்வீடனின் அண்டை நாடான பின்லாந்து மட்டும் நேட்டோ அமைப்பின் 31-வது உறுப்பு நாடாக கடந்த ஏப்ரல் மாதம் இணைந்தது.
  • இதனிடையே, உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, ஸ்வீடனை நேட்டோவில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. 
  • இந்த நிலையில், நேட்டோ கூட்டமைப்பில் ஸ்வீடனை இணைப்பதற்கான ஆட்சேபணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று துருக்கியிடம் அந்த அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் வலியுறுத்தியிருந்தார். 
  • இதனைத் தொடர்ந்து, நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றாக கடந்த 7-ஆம் தேதி ஸ்வீடன் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, பெல்ஜியத்தின் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் அமைந்துள்ள நேட்டோ தலைமையகத்தில் ஸ்வீடன் தேசியக்கொடி இன்று(மார்ச். 11) ஏற்றப்பட்டது.
  • ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் மற்றும் நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஆகியோர் கொடியேற்றத்தின்போது உடனிருந்தனர்.
பிரெஞ்ச் பேட்மிண்டன் ஓபன் 2024 - இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி சாம்பியன்
  • உலகின் நம்பர் 1 பேட்மிண்டன் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் இந்தியாவின் சிராக் ஷெட்டி ஜோடி, சீன தைபேயின் லீ ஜே-ஹூய் மற்றும் யாங் போ-ஹ்சுவான் ஜோடியை 21-11, 21-17 என்ற கணக்கில் தோற்கடித்து, 2024 ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் சூப்பர் 750 சீசனின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
  • சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் இன்று BWF பிரெஞ்ச் ஓபன் 2024 பட்டத்தை வென்றதன் மூலம் சீசனின் முதல் வெற்றியை ருசித்துள்ளனர்.
மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தில் கண்காணிப்பு ஆணையராக திரு ஏ.எஸ்.ராஜீவ் நியமனம்
  • குடியரசுத் தலைவர், 2024 பிப்ரவரி 9 தேதியிட்ட அறிவிக்கை மூலம் மற்றும் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழு சட்டம், 2003-ன் பிரிவு 4(1)-ன் கீழ், வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழு ஆணையராக திரு ஏ.எஸ்.ராஜீவை நியமித்துள்ளார்.
  • மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்புக் குழு சட்டம் 2003-ன் பிரிவு 5(3)-ல் உள்ள விதிமுறைக்கு இணங்க, குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையர் முன்பாக திரு ஏ.எஸ்.ராஜீவ் (2024, மார்ச் 11) இன்று ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel