8th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உத்தரகண்ட் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்
- திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
- அதற்குப் பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்ற வழியமைக்கும் ‘பொது சிவில் சட்டத்தை’ நாடு முழுமைக்கும் கொண்டுவர மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இது தொடா்பாக சட்ட ஆணையம் மூலமாக நாட்டு மக்களிடமும் கடந்த ஆண்டு கருத்து கேட்கப்பட்டது.
- இதனிடையே, பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் உத்தரகண்டில் பொது சிவில் சட்ட மசோதா வரைவை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு உருவாக்கிய 172 பக்கங்கள் கொண்ட பொது சிவில் சட்ட மசோதா 392 பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- பொது சிவில் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்ய உத்தரகண்ட் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை கூட்டப்பட்டது. 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பேரவை கூடியதும், பொது சிவில் சட்ட மசோதாவை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தாக்கல் செய்தாா்.
- பேரவையில் விவாதத்துக்குப் பின்னா் பொது சிவில் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மை உறுப்பினா்களின் ஆதரவோடு புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
- தொடா்ந்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்ததும், பொது சிவில் சட்டம் உத்தரகண்டில் அமலுக்கு வரும்.
- உத்தரகண்ட் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது சிவில் சட்ட மசோதவில் பழங்குடி சமூகத்தினருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- இந்த மசோதாவில் பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்து குறித்த பொது விதிகளை மசோதா கொண்டுள்ளது.
- அதேபோல், திருமணங்களைப் போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயாமாக்கப்பட்டுள்ளது. தவறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை நிர்வகிப்பதற்கும், பதுக்கல் மற்றும் நேர்மையற்ற ஊக வணிகத்தைத் தடுப்பதற்கும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்கள் / மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், பெருந்தொடர் சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்களுக்கு பொருந்தக்கூடிய கோதுமையின் இருப்பு வரம்புகளை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.
- குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் மீதான உரிமத் தேவைகள், இருப்பு வரம்புகள் மற்றும் இயக்கக் கட்டுப்பாடுகளை அகற்றுதல் (திருத்தம்) ஆணை, 2023 ஜூன் 12 அன்று வெளியிடப்பட்டது. இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2024, மார்ச் 31 வரை பொருந்தும்.
- கோதுமையின் விலையை மிதப்படுத்தும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கோதுமை இருப்பு வரம்பை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- இதன்படி வர்த்தகர்கள் / மொத்த விற்பனையாளர்கள் இருப்பு வரம்பு 1000 மெட்ரிக் டன் என்பதிலிருந்து 500 மெட்ரிக் டன் என மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையத்திற்கும் 5 மெட்ரிக் டன் என்பதில் மாற்றம் இல்லை.
- பெருந்தொடர் சில்லரை விற்பனையாளர்களின் ஒவ்வொரு கிடங்குக்கும் 5 மெட்ரிக் டன் மற்றும் அனைத்துக் கிடங்குகளிலும் 1000 மெட்ரிக் டன் என்பது ஒவ்வொரு கிடகுக்கும் 5 மெட்ரிக் டன் மற்றும் அனைத்து கிடங்குகளிலும் 500 மெட்ரிக் டன் என திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட நிறுவனங்களிடம் உள்ள சரக்குகள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருந்தால், அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் அவர்கள் அதை பரிந்துரைக்கப்பட்ட இருப்பு வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.
- நாட்டில் கோதுமைக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த இருப்பு வரம்புகள் அமலாக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிப்பார்கள்.
- மேலும், உணவு மற்றும் பொது விநியோகத் துறை, கோதுமை விலையைக் கட்டுப்படுத்தவும், நாட்டில் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்யவும் கோதுமையின் இருப்பு நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.