Type Here to Get Search Results !

26th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


26th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

75வது குடியரசு தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
  • சென்னை காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 8 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடியை பறக்கவிட்டார்.
  • தொடர்ந்து குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.முன்னதாக காலை 7.50 மணி அளவில் போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதல்வர் ஸ்டாலின் வந்தார். 
  • அவரை தொடர்ந்து ஆளுநர் ரவி, ராணுவ வாகன அணிவகுப்புடனும் விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றும்போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டது. 
  • அத்துடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தமிழக காவல் துறை , தேசிய மாணவர் படை, வனம், சிறை, தீயணைப்பு துறைகளின் படைப்பிரிவினர், பள்ளி, கல்லூரி பேண்டு வாத்திய குழுவினர், சாரண, சாரணியர், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
தில்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் முர்மு
  • நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார். 
  • இதையடுத்து, தில்லியில் 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.  
  • இந்த விழாவில் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிடோர் பார்வையிட்டனர். 
ஐஆர்இடிஏ 'பஹல்' விஜிலென்ஸ் இதழை வெளியிடுகிறது
  • மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (ஐஆர்இடிஏ), அதன் ஊழல் கண்காணிப்புத் துறையின் 'பஹல்' என்ற அறிவார்ந்த இதழை வெளியிட்டுள்ளது. 
  • இந்த இதழை ஐஆர்இடிஏ- வின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு பிரதீப் குமார் தாஸ் ஜனவரி 25, 2024 அன்று வெளியிட்டார். புதுதில்லியில் உள்ள ஐ.ஆர்.இ.டி.ஏ.வின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி திரு அஜய் குமார் சஹானி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
  • இந்த முன்முயற்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel